வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருக்கையில் மயங்கி விழுந்த ஆசிரியை - நேர்ந்த துயரம்
வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து ஆசிரியை உயிரிழந்துள்ளார்.
ஆசிரியை உயிரிழப்பு
கேரளா, மாராயமுட்டம் பகுதியை சேர்ந்தவர் வினோதினி(49). இவர் பாறசாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில். ஆனாவூர் அரசு பள்ளியில் கேரள கல்வித்துறையின் சிறப்பு திட்டத்தின் கீழ் சிறுவர்களுக்கு வகுப்பறையில் கம்ப்யூட்டர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்துள்ளார். தொடர்ந்து சிறிது நேரத்தில் வினோதினி திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
உடனே அங்கிருந்த சக ஆசிரியர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைவில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.