செம தூக்கம் மன்னிச்சுடுங்க - இந்தியாவுடனான போட்டியில் வங்கதேச துணை கேப்டன் செய்த காரியம்

Bangladesh Bangladesh Cricket Team T20 World Cup 2024
By Karthikraja Jul 03, 2024 03:00 PM GMT
Report

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வங்கதேச துணை கேப்டன் விளையாடாத காரணம் வெளியாகியுள்ளது.

வங்கதேச வீரர்

நடந்து முடிந்த T20 உலக கோப்பை தொடரில் இந்தியா அணி கோப்பையை கைப்பற்றியது. இதில் ஜூன் 22 ம் தேதி நடைபெற்ற சூப்பர் 8 போட்டியில் இந்தியா பங்களாதேஷ் உடன் மோதியது. இந்த போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் வங்க தேச அணி இந்திய அணியிடம் தோல்வியை தழுவியது.

india vs bangladesh t20 taskin ahmed

வேகப்பந்து வீச்சாளரான டஸ்கின் அஹமத் இந்த போட்டியில் விளையாடவில்லை. அவர் ஏன் ஆடவில்லை என்ற காரணத்தை வங்கதேச கிரிக்கெட் வாரிய உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

மீண்டும் CSK ல் இணைந்த அஸ்வின் - தோனிக்கு அடுத்த பதவியை கொடுத்த நிர்வாகம்

மீண்டும் CSK ல் இணைந்த அஸ்வின் - தோனிக்கு அடுத்த பதவியை கொடுத்த நிர்வாகம்

மன்னிப்பு

டஸ்கின் அஹமத் நன்றாக உறங்கி விட்டதாகவும், தாமதமாக எழுந்ததால் அவரை அணி வீரர்கள் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் பேருந்தை தவற விட்டுள்ளார் என தகவல்கள் வந்துள்ளது. மேலும், அவர் தாமதமாகவே மைதானத்திற்கு வந்துள்ளார். இருப்பினும் தாமதத்திற்கு அவர் அணியினரிடமும், பயிற்சியாளரிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார். 

taskin ahmed

அணியின் பயிற்சியாளரே தாமதமாக வந்ததால் அவர் இந்த ஆட்டத்தில் விளையாட வேண்டாம் என்ற முடிவெடுத்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அவர் ஆப்கானிஸ்தானுடனான அடுத்த போட்டியில் விளையாடியுள்ளார். இதனால் அவருக்கும் பயிற்சியாளருக்கும் இடையே எந்த பிரச்னையும் இல்லை என தெளிவாகியுள்ளது.