ஃபேஸ்புக் மூலம் காதல்.... கோலாகலமாக திருமணம் செய்து கொண்ட தன்பால் ஈர்ப்பாளர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்
ஃபேஸ்புக் மூலம் மலர்ந்த காதல்
கொல்கத்தாவைச் சேர்ந்த அபிஷேக் ரே என்பவருக்கு சைதன்யா சர்மா என்பவருடன் அறிமுகம் கிடைத்தது. ஆரம்ப கட்டத்தில் இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். ஆனால், நாளடைவில் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து வாழ முடியாத நிலை ஏற்பட்டபோது ஒரு முடிவுக்கு வந்தனர். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்கள்.
இதனையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் கோவாவில் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். முதலில் இவர்கள் இருவரும் எளிமையான முறையில் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டனர். ஆனால், இது தொடர்பாக விழிப்புணர்வை உண்டாக்கும் வகையில் இருவரும் சேர்ந்து தங்களின் திருமணத்தைப் பிரமாண்டமாக நடத்த முடிவெடுத்தனர்.
தன்பால் ஈர்ப்பாளர்கள் திருமணம்
இந்நிலையில், கொல்கத்தாவில், அக்னி முன்பு இவர்கள் இருவரும் திருமண உறுதிமொழி எடுத்துக் கொண்டு, இந்து முறைப்படி பெங்காலி மற்றும் மார்வாரி முறையில் திருமணம் செய்து கொண்டனர். இத்திருமணத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் திரளாக வந்து கலந்து கொண்டு ஆட்டம், பாட்டத்துடன் இத்திருமணம் நடந்து முடிந்தது.
தற்போது இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அதிகாரபூர்வ இணையதளம் துவக்கம் - ரசிகர் மன்ற பொதுச்செயலாளர் தகவல்