சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 62 வயது முதியவர் - நீதிமன்றம் அதிரடி

Tamil nadu Sexual harassment Crime
By Sumathi Jan 28, 2023 07:20 AM GMT
Report

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 27ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை

தஞ்சாவூர், மெலட்டூர் அருகே ஏரவாடி வடக்கு தெருவை சேர்ந்தவர் நாகராஜன்(62). இவர் பலகார கடை நடத்தி வந்தார். இவரது கடைக்கு வந்த ஒன்பதாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இதையாரிடமும் சொல்லக்கூடாது எனவு மிரட்டியுள்ளார்.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 62 வயது முதியவர் - நீதிமன்றம் அதிரடி | Tanjavore Punished Senior Citizen For Raping

தொடர்ந்து, வீட்டிற்கு வந்ததும், நடந்த கொடுமையை சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இந்த புகாரின் பேரில் பாபநாசம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜனை கைது செய்தனர்.

நீதிமன்றம் அதிரடி

பின் இந்த வழக்கு விசாரணை தஞ்சை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சுந்தர்ராஜன் நாகராஜனுக்கு 25ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

அபராதம் கட்ட தவறினால் மேலும் ஒண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் அரசு தரப்பில் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.