காதலனை நம்பிச் சென்ற சிறுமி - 8 பேர், 12 மணி நேரம் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்!

Sexual harassment Maharashtra Child Abuse Crime
By Sumathi Dec 19, 2022 06:14 AM GMT
Report

16 வயது சிறுமி, 12 மணி நேரம் தொடர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

 பாலியல் வன்கொடுமை

மகாராஷ்டிரா, பால்கர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவருக்கும் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த இளைஞருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், இளைஞர் அந்தச் சிறுமியை மாலை கடற்கரை அருகே உள்ள

காதலனை நம்பிச் சென்ற சிறுமி - 8 பேர், 12 மணி நேரம் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்! | 16 Year Old Gang Raped By 8 Men Maharashtra

மஹிம் என்ற கிராமத்தில் ஆள்நடமாட்டமற்ற பங்களாவுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். தொடர்ந்து, அவரின் நண்பர்கள் 7 பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

கொடூரம் 

இதனை எதிர்த்த சிறுமியை தாக்கியுள்ளனர். அதனையடுத்து, 8 பேரும் சிறுமியை கடற்கரை அருகே உள்ள புதருக்கு அழைத்துச் சென்று அங்கேயும் வன்கொடுமை செய்துள்ளனர். இதனால் சிறுமி மயக்கம் அடைந்துள்ளார்.

ஆனாலும், 12 மணி நேரத்திற்கு மேல் சிறுமியை அந்த கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. அதன்பின் அவரை அந்தக் கும்பல் விடுவித்துள்ளது. புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் 8 பேரையும் கைது செய்துள்ளனர்.