விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி- அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

tamil protest bank
By Jon Feb 11, 2021 11:44 AM GMT
Report

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளின் கடன் சுமையை குறைக்கும் வகையில் கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட ரூ.12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அண்மையில் அறிவித்திருந்தார். விவசாயிகள் நகைக்கடன் வாங்கி இருந்தாலும் அவை தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில்,கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி- அரசாணை வெளியிட்டது தமிழக அரசு | Tamilnadu Farmer Loan Edappadi

அதன்படி, தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் ரூபாய் 12,110 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

இதற்கான தேவையான நிதியானது , அரசால் கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கப்படும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான சான்றிதழை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்குவார் என கூறப்படுகிறது.