அதிமுக வேட்பாளராக தென்னரசுவை அறிவித்து படிவம் - தமிழ்மகன் உசேன் வெளியீடு
அதிமுக வேட்பாளராக தென்னரசுவை அறிவித்து பொதுக்குழு அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் படிவம் வெளியிட்டார்.
வேட்பாளர் தென்னரசு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் குறித்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். பொதுக்குழு முடிவினை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தெரிவிக்க வேண்டும்.
அதை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும். இந்த உத்தரவு இடைத்தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு அதிமுக வேட்பாளராக தென்னரசுவை அறிவித்து ஒப்புதல் படிவத்தை அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழ்மகன் உசேன் படிவம்
அதில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளரை பொதுக்குழு உறுபினர்கள் சுற்றறிக்கை மூலம் தேர்வு செய்வதற்கு சுப்ரீம் கோர்ட்டு ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சுற்றரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
பொதுக்குழு உறுப்பினர்கள் சுற்றறிக்கையை முறையாக பூர்த்தி செய்து நாளை இரவு 7 மணிக்குள் அதிமுக தலைமை அலுவலகத்தில் என்னிடம் சேர்ந்துவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.