ஒரு வருடம்..கம்பியால் சித்ரவதை; பாலியல் அடிமையாக நடத்திய தமிழ் இயக்குநர் - நடிகை பகீர்!

Tamil Cinema Sexual harassment Kerala Actress
By Swetha Sep 06, 2024 07:45 AM GMT
Report

தன்னை பாலியல் அடிமையாக தமிழ் இயக்குநர் நடத்தியதாக நடிகை ஒருவர் கூறியுள்ளார்.

நடிகை பகீர்

மலையாள திரையுலகில், ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதில் இருந்த பல திடுக்கிடும் தகவல் வெளிவந்து கொண்டே உள்ளது. அதாவது நடிகைகள் பலர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து வெளிப்படையாக சொல்லி வருகின்றனர்.

ஒரு வருடம்..கம்பியால் சித்ரவதை; பாலியல் அடிமையாக நடத்திய தமிழ் இயக்குநர் - நடிகை பகீர்! | Tamill Director Kept Me As Sex Slave Says Actress

இந்த விவகாரம் பெரும் சர்சையாக வெடித்த நிலையில், மலையாள சினிமாவில் மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் மெல்ல பரவ தொடங்கியது. அந்த வகையில், மூத்த தென்னிந்திய நடிகையான சௌமியா தமிழ் இயக்குநர் ஒருவர் மீது பகீரங்கமான பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அந்த இயக்குநர் தனக்கு மனநலன் ரீதியாகவும், உடல்நலன் ரீதியாகவும் துன்புறுத்தியது மட்டுமின்றி பாலியல் ரீதியாகவும் வன்கொடுமையில் ஆழ்த்தியதாக குற்றஞ்சாட்டி உள்ளார். அதிலும் குறிப்பாக பொழுதுபோக்கிற்காக தன்னுடைய பிறப்புறுப்பில் கம்பி நுழைத்து சித்ரவதைக்கு ஆளாக்கியதாகவும் குற்றஞ்சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக அவர் அன்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, எனக்கு அப்போது, 18 வயது. தமிழ் இயக்குநர் ஒருவர், அவரது மனைவியுடன் வந்து, என் அப்பாவிடம் பேசி சினிமாவில் நடிக்க வைப்பதாக அழைத்து சென்றார்.

சினிமாவில் அது கிடையாது..ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து மனம் திறந்த மம்முட்டி!

சினிமாவில் அது கிடையாது..ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து மனம் திறந்த மம்முட்டி!

தமிழ் இயக்குநர்

படத்தில் நடிக்கும் போது, அந்த இயக்குநரின் கட்டுப்பாட்டில் தான் இருந்தேன். ஒரு நாள் இயக்குநரின் மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில், என்னை மகள் போன்று நினைப்பதாக கூறி முத்தமிட்டார். அப்போதே, எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. என்னுடன் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

ஒரு வருடம்..கம்பியால் சித்ரவதை; பாலியல் அடிமையாக நடத்திய தமிழ் இயக்குநர் - நடிகை பகீர்! | Tamill Director Kept Me As Sex Slave Says Actress

பின், அவரால் நான் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டேன். ஓராண்டு காலம் அந்த இயக்குநரின் பாலியல் அடிமையாக இருந்தேன். பயத்தால் இதை அப்போது என்னால் கூற முடியவில்லை. இந்த அவமான உணர்வில் இருந்து வெளியே வர எனக்கு, 30 ஆண்டுகளாது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஆனால், அந்த இயக்குநர் யார் என்ற விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை. போலீசாரின் விசாரணையில், அவர் பற்றிய விவரத்தை தெரிவித்துள்ளதாக, அவர் கூறியுள்ளார். அவரது பேட்டி மலையாள மற்றும் தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.