கணவனின் புகைப்படத்தை காலில் போட்டு மிதித்து Divorce-ஐ கொண்டாடி போட்டோ ஷுட் நடத்திய நடிகை..!
காதல் கணவனை விவகாரத்து செய்த சின்னத்திரை நடிகை ஷாலின் கணவனின் புகைப்படத்தை கிழித்தும் அதை காலில் போட்டு மிதித்தும் போட்டோ ஷுட் நடத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தொழில் அதிபருடன் காதல் திருமணம்
சென்னையைச் சேர்ந்தவர் சின்னத்திரை நடிகை ஷாலினி, முதல் கணவரை விவாகரத்து செய்த பின்னர் துபாய்க்கு நடனமாட சென்றுள்ளார்.
அங்கு கும்பகோணத்தைச் சேர்ந்தவர் ரியாஸ் இவர் துபாய்க்கு வந்த நடிகை ஷாலினியை சந்தித்து தன்னை தொழில் அதிபர் என்று கூறி தன்னை அறிமுகப்படுத்தியுள்ளார்.
பின்னர் இருவருக்கும் இடையேயான நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. நடிகை ஷாலினியை ரியாஸ் கும்பகோணம் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
மனைவியை கொடுமைப்படுத்திய கணவன்
அதன் பின்னர் தனது மதத்திற்கு மாற்றி முறைப்படி திருமணம் செய்து கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. திருமணத்திற்கு பின்னர் சென்னையிலும், துபாயிலும் குடித்தனம் நடத்திய ரியாஸ் மது போதையில் அடித்து காயப்படுத்தியதாகவும், காரில் இருந்து நடுவழியில் இறக்கி விட்டுச் சென்றாகவும் புகார் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஷாலினிக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் வீட்டுக்கு வருவதை ரியாஸ் குறைத்து கொண்டுள்ளார்.
இதையடுத்து கணவர் ரியாஸை தேடி ஷாலினி கும்பகோணம் சென்றுள்ளார். அங்கிருந்த ரியாஸின் முதல் மனைவி மற்றும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ரியாஸ் முதல் மனைவியை பிரியாமல் ஷாலினியை திருமணம் செய்ததால் இவர்களின் திருமணம் செல்லாது என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்து போன ஷாலினி கண்ணீர் விட்டு கதறி உள்ளார். இந்த நிலையில் துபாய்க்கு சென்ற ரியாஸ் 3வதாக வேறு ஒரு நடிகையுடன் சேர்ந்து வாழ்வதாக ஷாலினிக்கு தெரியவந்துள்ளது.
விவாகரத்தை கொண்டாடிய நடிகை
தன்னை காதலிப்பதாக நம்ப வைத்து ஏமாற்றியதோடு சின்னத்திரை வாய்ப்புகள் இல்லாமல் செய்த காதல் கணவரை பிரிந்து விட்டதை ஊருக்கு பகிரங்கமாக அறிவிக்கும் வகையில் டிவோர்ஸ் போட்டோ ஷுட் ஒன்றை செய்த ஷாலினி அதை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்த நிலையில் வைரலாகியுள்ளது.
தன்னை 5 ஆண்டுகளாக கொடுமைப்படுத்திய கணவரின் புகைப்படத்தை காலில் போட்டு மிதித்தும், கணவரின் புகைப்படத்தை கிழித்தும் தனது விவாகரத்து அறிவிப்பை போட்டோ ஷுட் நடத்தி கொண்டாடியுள்ளார்.

இஸ்ரேலை அடித்து நொறுக்கும் ஈரான்...!: பாலிஸ்டிக் ஏவுகணைகளால் அதிரும் நகரங்கள் - பதிவான மரணம் IBC Tamil

ஏவுகணை தாக்குதல் தொடர்ந்தால் ஈரான் பற்றி எரியும் : இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் கடும் எச்சரிக்கை IBC Tamil
