பிரபல சின்னத்திரை நடிகை தூக்கிட்டு தற்கொலை - ரசிகர்கள் அதிர்ச்சி

Anupriyamkumaresan
in பிரபலங்கள்Report this article
பிரபல சின்னத்திரை நடிகை சௌஜன்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னட சின்னத்திரை மற்றும் சினிமா நடிகையாக வலம் வந்தவர் செளஜன்யா. இவர் பெங்களூரில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை பொலிசார் கைப்பற்றியுள்ளனர். அதில், தன்னுடைய இந்த முடிவுக்கு யாரும் பொறுப்பல்ல, நான் மட்டுமே பொறுப்பு. என் பெற்றோர் என்னை மன்னிக்க வேண்டும், எனக்கு எந்தவொரு உடல்நலப்பிரச்சினையும் இல்லை என்றாலும் வாழ்க்கையில் தான் எதிர்கொண்ட விஷயங்களால் மனதளவில் பாதிக்கப்பட்டேன்.
எனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி என எழுதப்பட்டுள்ளது.செளஜன்யாவின் மரணம் மற்றும் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இவரின் மரணம் ரசிகர்களையும் சக, நடிகர், நடிகைகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.