மும்பை ரயில்வே அணியில் விளையாட போகும் தமிழன்

team tamil player mumbai
By Jon Mar 14, 2021 01:20 PM GMT
Report

ராசிபுரத்தில் தறி தொழிலாளியின் மகன் மும்பை ரயில்வே அணியில் விளையாட வாய்ப்பு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள கடந்தபட்டியை சேர்ந்த தறித் தொழிலாளி துரைசாமியின் மகன் லோகேஷ். சிறுவயது முதலே கிரிக்கெட்டில் அதிகம் ஆர்வம் கொண்டதால் எப்போதும் கிரிக்கெட் விளையாடி வந்துள்ளார்.

இதனையடுத்து கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியில் சிறப்பாக விளையாடியதால் ஆத்தூரில் நடைபெற்ற போட்டியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனை நன்றாக பயன்படுத்திக்கொண்ட லோகேஷ் பத்து லீக் ஆட்டத்தில் விளையாடி மேன் ஆப்தி சீரிஸ் விருதை வென்றுள்ளார். மேலும் சென்னை அணியில் விளையாட லோகேஷுக்கு வாய்ப்பு கிடைத்தது.

அதன் மூலம் மும்பை அகாடமி அணிக்கு தேர்வாகி 24 லீக் ஆட்டத்தில் 832 ரன் எடுத்தார். அதில் 73 பவுண்டரி மற்றும் 56 சிக்சர் விளாசியுள்ள அவர் 78 ஓவர்களில் 46 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் மும்பை ரயில்வே அணிக்காக விளையாட தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.