பெண்கள் பியூட்டி பார்லருக்கு தடையா? - உரிமைகளை பறித்த நாடு..!
ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்களின் அழகு நிலையங்களுக்கு தடை விதித்ததால் அதிர்ச்சியில் உள்ளனர்.
பார்லருக்கு தடை
ஆப்கானிஸ்தான் நாட்டில், தலிபான் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அரசு பெண்களுக்கு எதிராக பல தடைகளை விதித்து வருகிறது. பெண்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல தடை, பின்னர் என்.ஜி.ஓ.-வில் பணிபுரிய தடை.
பூங்கா, சினிமா மற்றும் பொழுபோக்கு இடங்களில் வேலை செய்ய தடைவித்தது. தற்பொழுது அந்த வரிசையில் பெண்களின் அழகு நிலையங்களுக்கு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெண்களின் குமுறல்
இந்நிலையில், அந்நாட்டு பெண்கள் கூறுகையில், "ஏற்கனவே ஆண்கள் வேலையின்றி தவிக்கிறார்கள். ஆண்கள் வீட்டு சுமையை ஏற்கமுடியாத நிலையில், பெண்கள் அதனை ஏற்க அழகு நிலையங்கள் போன்ற இடங்களில் வேலை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
அவர்கள் தற்போது அழகு நிலையத்திற்கு தடைவிதித்தால், நாம் என்ன செய்ய முடியும்'' என்று கூறியுள்ளனர். மேலும், "ஆண்களுக்கு வேலை இருந்தால், நாங்கள் வீட்டில் இருந்து வெளியே வரமாட்டோம். நாங்கள் தற்போது என்ன செய்யும்?. பட்டினி கிடந்து சாக வேண்டியதுதான். நாங்கள் என்ன செய்ய வேண்டும்?. நாங்கள் சாக வேண்டும் என விரும்புகிறீர்களா?" என்று தங்களது மன குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர்.