ஹர்திக் பாண்டியா - ரோஹித் சர்மா வெடிக்கும் மோதல்; டிராவிட் எடுத்த அந்த முடிவு!
ஹர்திக் பாண்டியாவுக்கும் ரோஹித் சர்மாவுக்கும் மனக்கசப்பு உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
ரோஹித்-பாண்டியா
2024 டி20 உலகக் கோப்பையில் ஹர்திக் பாண்டியா மற்றும் ரோஹித் சர்மா இருவரும் ஒரே அணியில் விளையாடவுள்ளனர். குறிப்பாக ரோஹித் சர்மா கேப்டன் ஆகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டன் ஆகவும் விளையாடுகின்றனர்.
உலகக் கோப்பை தொடருக்கு முன் நடந்த பயிற்சிப் போட்டியில் இருவரும் பெரிதாக பேசிக் கொள்ளவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியை ஹர்திக் பாண்டியா கைப்பற்றியதால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக தகவல் பரவி வந்தது.
டிராவிட் முடிவு
இந்நிலையில், அயர்லாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை குரூப் சுற்று போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஒரு விஷயத்தௌ செய்துள்ளார்.
வலைப் பயிற்சியின் போது ரோஹித் சர்மா பேட்டிங் செய்து கொண்டு இருந்தார். அப்போது ஹர்திக் பாண்டியாவை அழைத்த அவர், ரோஹித் சர்மாவுக்கு பந்து வீசுமாறு கூறினார்.
அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் தனியாக சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இருவரும் பேசிக்கொண்டனர்.
இதனை கண்ட இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.