IND VS SA: கடைசி நேரத்தில் இடம்பிடித்த உமேஷ் யாதவ், ஷாபாஸ் அகமது!
இந்தியா – தென்ஆப்ரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் இன்று தொடங்கவுள்ளது.
டி20 தொடர்
தென்ஆப்ரிக்க அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடவுள்ளது. டி20 தொடர் இன்றுமுதல் தொடங்கவுள்ளது. இதற்கான இந்திய அணி முன்பே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில். தீபக் ஹூடா காயம் காரணமாக விலகியதால் அவருக்கு பதில் சபாஷ் அஹமது அணியில் இணைக்கப்ட்டுள்ளார். முகமது சமி கொரோனா தொற்றில் இருந்து குணமாகவில்லை. புவனேஷ்வர் குமார் மற்றும் ஹர்திக் பாண்டியாவுக்கு தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
அணியில் மாற்றம்
இதன் காரணமாக தேர்வுக் குழு ஷமிக்கு பதிலாக உமேஷ் யாதவையும், ஹூடாவுக்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயரையும் நியமித்துள்ளது. டி20 அணியில் ஷாபாஸ் அகமதுவும் சேர்க்கப்பட்டுள்ளார்.
தற்போது இந்திய அணியில், ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஆர்.அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ஷாபாஸ் அகமது இடம்பெற்றுள்ளனர்.
கேரளா, திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் மைதானத்தில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான டி-20 தொடரின் முதல் போட்டி இன்று மாலை துவங்க உள்ள நிலையில் போலீஸார் கட்டுப்பாட்டில் திருவனந்தபுரம் மாநகரம் வந்துள்ளது.