கந்தசஷ்டி: தமிழகத்தில் சூரசம்ஹாரம் கோலாகலம்!
முருகன் கோவிலில் கந்தசஷ்டியை முன்னிட்டு இன்று பல இடங்களில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
சூரசம்ஹாரம்
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மிகவும் எளிமையான முறையில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிய நிலையில் கந்தசஷ்டி விழா களைகட்டியுள்ளது.
பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு கடந்த 25ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இந்நிலையில், சூரசம்ஹாரம் இன்று நடைபெறுகிறது.
கோலாகலம்
அதேபோல், திருச்செந்தூர் முருகன் கோவிலிலும், 6-ம் நாளான இன்று மாலையில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.
காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு பக்தர்கள் எளிதில் காணும் வகையில், பல்வேறு இஅடங்களில் டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 580 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.