நிறுத்துங்கள்.. MY LORD என்று சொல்ல வேண்டாம் - கடுப்பான சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ்!
நீதிபதி வழக்கறிஞரை இடைநிறுத்தி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுப்ரீம் கோர்ட்
பொதுவாக நீதிமன்றங்களில் வாதாடும் வழக்கறிஞர்கள் நீதிபதிகளை மை லார்ட், யூவர் லார்ட் என்று அழைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இது ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் இருந்தே இப்படி அழைக்கும் முறை நடைமுறையில் உள்ளது. நாம் பல படங்களில் பார்த்திருப்போம் தற்பொழுது வரை வழக்கறிஞர்கள் மை லார்ட் என்று தான் அழைத்து வருகின்றனர்.
உச்சநீதிமன்றத்தில் மூத்த நீதிபதி ஏஎஸ் போபண்ணா தலைமையிலான அமர்வு வழக்கு ஒன்றை விசாரித்தது. அந்த அமர்வில் நீதிபதி பிஎஸ் நரசிம்மா இடம் பெற்றிருந்தார். அப்பொழுது ஒரு வழக்கறிஞர் வாதாடும்பொழுது அடிக்கடி ‛மை லார்ட்' என்ற வார்த்தையை பயன்படுத்தினார்.
நீதிபதி
இந்நிலையில், நீதிபதி பிஎஸ் நரசிம்மா, வழக்கறிஞரை குறுக்கிட்டு, "எத்தனை முறை தான் ‛மை லார்ட்' என அழைப்பீர்கள். இவ்வாறு சொல்வதை நீங்கள் நிறுத்திவிட்டால் என் சம்பளத்தில் பாதியை உங்களுக்கு தருகிறேன். ‛மை லார்ட்' என அழைப்பதற்கு பதில் நீங்கள் ஏன் ‛சார்' என அழைக்க கூடாது. இல்லையெனில், நீங்கள் எத்தனை முறை ‛மை லார்ட்' என அழைக்கிறீர்கள் என்பதை எண்ணி கொண்டிருப்பேன்" என்று கூறியுள்ளார்.
மேலும், நீதிபதிகளை மை லார்ட்', யூவர் லார்ட்ஷிப் என்று வழக்கறிஞர்கள் யாரும் அழைக்கக் கூடாது என்று 2006ல் இந்திய பார் கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியது.
நீதிபதிகளை இப்படி அழைப்பது என்பது காலனித்துவ கால நினைவாக இருக்கிறது. அதோடு அடிமைத்தனத்தின் அடையாளமாக இருக்கிறது எனக்கூறி இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.