குழந்தை பெத்துக்க முடியாது; வேற கல்யாணம் பண்ணிக்கோங்க - குஷ்பூ குறித்து சுந்தர்.சி

Sundar C Khushbu Tamil Cinema
By Sumathi Apr 29, 2024 02:30 PM GMT
Report

மனைவி குஷ்பூ குறித்து சுந்தர்.சி மனம் திறந்துள்ளார்.

குஷ்பூ

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிப் படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக உச்சம் பெற்றார்.

khushbu - sundar c

ரஜினி, கமல், சத்யராஜ், கார்த்திக், பிரபு போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து மக்கள் மத்தியில் இன்று வரை நீங்கா இடம் பிடித்து வருகிறார். தொடர்ந்து இயக்குனர் சுந்தர்.சி யை திருமணம் செய்து கொண்டார். 2 மகள்கள் உள்ளனர்.

தனது அரசியல் வாழ்க்கையை திமுகவில் ஆரம்பித்த அவர் அதன் பிறகு காங்கிரஸ் சென்றார். அங்கும் சில பிரச்னைகள் வெடிக்க தற்போது பாஜகவில் இணைந்து அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில், தனது மனைவி குஷ்பூ குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள சுந்தர்.சி,

ரொமான்ஸ் வரும்போதெல்லாம் அந்த நடிகரைத் தான் நினைப்பேன் - குஷ்பூ பகீர்!

ரொமான்ஸ் வரும்போதெல்லாம் அந்த நடிகரைத் தான் நினைப்பேன் - குஷ்பூ பகீர்!

சுந்தர்.சி தகவல்

“குஷ்பூவிற்கு ஒருமுறை உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அப்போது மருத்துவர் ஒருவர், உங்களால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்று கூறிவிட்டார். இதனால் ரொம்பவே மனம் உடைந்து போன குஷ்பூ, கண்ணீர் விட்டு அழுதார். என்னிடம், நீங்கள் வேறு திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று கூறினார்.

khushbu family

அதன் பிறகு நாங்கள் அந்த மனநிலைமையிலேயே வாழ்ந்தோம். ஆனால் கடவுள் வேறு ஒரு கணக்கை போட்டிருந்தார். எங்களுக்கு முதல் குழந்தை பிறந்தது. ஒரு பெண் தேவதை மட்டுமில்லாமல் மகள்கள் வடிவில் இரண்டு தேவதைகள் பிறந்தார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.