உனக்காக விரதம் இருப்பேன்; ஒருவரோடு ஒருவராக இருப்போம் - நடிகைக்கு சிறையில் இருந்து உருகிய சுகேஷ் சந்திரசேகர்

Delhi
By Sumathi Oct 17, 2023 10:12 AM GMT
Report

நலனுக்காக விரதம் இருப்பதாக நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு, சுகேஷ் சந்திரசேகர் கடிதம் எழுதியுள்ளார்.

சுகேஷ் சந்திரசேகர் 

இரட்டை இலை சின்னம் பெறுவதற்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்ட வழக்கில் பிரபலமான சுகேஷ் சந்திரசேகர் மீது 15 மோசடி வழக்குகள் உள்ளன.

உனக்காக விரதம் இருப்பேன்; ஒருவரோடு ஒருவராக இருப்போம் - நடிகைக்கு சிறையில் இருந்து உருகிய சுகேஷ் சந்திரசேகர் | Sukesh Chandrasekhars Letter From Jail Jacqueline

இந்த வழக்கில், அமலாக்க அதிகாரிகள் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததில் பல அதிர்ச்சி தகவல் வெளிவந்தது. அவர் உதவியாளர் மூலம்தான் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், சுகேஷ்கு அறிமுகமாகியுள்ளார்.

நடிகைக்கு கடிதம்

2 கார்கள், ஏராளமான விலையுயர்ந்த பரிசு பொருட்கள் மற்றும் பணத்தை அவரிடம் இருந்து பெற்றிருக்கிறார். தொடர்ந்து இருவரும் திருமணம் செய்ய இருந்த நேரத்தில் சுகேஷ் சந்திரசேகர் மீது வழக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

உனக்காக விரதம் இருப்பேன்; ஒருவரோடு ஒருவராக இருப்போம் - நடிகைக்கு சிறையில் இருந்து உருகிய சுகேஷ் சந்திரசேகர் | Sukesh Chandrasekhars Letter From Jail Jacqueline

சிறையிலிருந்து அடிக்கடி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு கடிதம் எழுதி பரபரப்பை கிளப்புவார். இந்நிலையில், தற்போது எழுதியுள்ள கடிதம் ஒன்றில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் சமீபத்தில் தோகா கண்காட்சியில் தோன்றினார்.

அதனை முன்னிட்டு, "பேபி, தோகா ஷோவில் நீ கவர்ச்சியாகவும், மிக அழகாகவும் இருந்தாய். என் பொம்மா. உன்னைவிட யாரும் அழகில்லை. உன் நல்வாழ்வுக்காக, நம்மைச் சுற்றியுள்ள எதிர்மறை எண்ணங்களை அகற்றுவதற்காக 9 நாட்களும் உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன்.

நடிகைகளுடன் உல்லாசம்.. ஸ்ரீதேவி மகளுக்கு ஸ்கெட்ச் போட்ட  சுகேஷ் சந்திரசேகர்

நடிகைகளுடன் உல்லாசம்.. ஸ்ரீதேவி மகளுக்கு ஸ்கெட்ச் போட்ட சுகேஷ் சந்திரசேகர்

மாதாவின் சக்தியால் எல்லாமே நமக்கு சாதகமாக இருக்கும். உண்மை வெல்லும். நாம் விரைவில் ஒருவரோடு ஒருவராக இருப்போம். என்ன நேர்ந்தாலும் ஒன்றாகவே வாழ்வோம். நான் உன்னை நேசிப்பதை எந்த சிறையாலும் தடுக்க முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.