இளைஞரை முத்தமிட்ட இளம்பெண் - மரண தண்டனை அளித்த நீதிமன்றம்!
இளைஞரை முத்தமிட்ட இளம்பெண்ணுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முத்தமிட்ட பெண்
சூடானில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. அங்கு திருட்டு, விபச்சாரம் போன்ற குற்றங்களுக்கு கைகளை வெட்டுதல், கல்லால் அடித்தல், மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், ஒயிட்நைஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி விவாகரத்து ஆகியுள்ளது. தொடர்ந்து, இளைஞர் ஒருவருடன் நெருக்கமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அந்தப் பெண்ணின் உறவினர் ஆத்திரத்தில் அந்த இளைஞரை கொலை செய்துள்ளார்.
சிறை தண்டனை
அதனையடுத்து, அந்தப் பெண்ணின் மீது தகாத உறவில் இருந்ததன் காரணமாக விபச்சார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு, நீதிமன்றம் அந்த பெண்ணுக்கு கல்லால் அடித்து மரண தண்டனை வழங்கி உத்தரவிட்டது.
ஆனால், உலக அளவில் எதிர்ப்புகள் இருந்த நிலையில், அந்த தண்டனை வாபஸ் பெறப்பட்டு மறு விசாரணை செய்யப்பட்டது. அதில் அந்தப் பெண் தனது காதலனுடன் நெருக்கமாக இருந்தபோது முத்தமிட்டதை ஒப்புக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.