கே பாலச்சந்தரும் அப்படிப்பட்ட ஆள்தான் - சுசித்ரா குற்றச்சாட்டு

Tamil Cinema Suchitra Tamil Directors Tamil Singers K. Balachander
By Karthikraja Sep 19, 2024 01:23 PM GMT
Report

பிரபல இயக்குநர் கே.பாலசந்தர் குறித்து பாடகி சுசித்ரா பேசியுள்ளார்.

பாலியல் தொல்லை

கேரளாவில் ஹேமா ஆணைய அறிக்கை வெளியான பின் மலையாள சினிமா துறை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் உலுக்கியது. 

hema commission report

இதனையடுத்து பல்வேறு நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது நடிகைகள் வெளிப்படையாக பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி வருகின்றனர். இது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க தமிழ் சினிமா துறையிலும் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

என் குரல் அந்த மாதிரி இருக்குன்னு..தனியா வரச்சொன்னார் - வைரமுத்து மீது பாடகி குற்றசாட்டு!

என் குரல் அந்த மாதிரி இருக்குன்னு..தனியா வரச்சொன்னார் - வைரமுத்து மீது பாடகி குற்றசாட்டு!

சுசித்ரா 

சமீபத்தில் ரவுடி பேபி, மேகம் கருக்காதா, ஹலமிதி ஹபி போ, காவாலா ஆகிய பாடல்களுக்கு நடனம் அமைத்த பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டர், பெண் நடனக் கலைஞர் அளித்த பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

jani master arrested

பிரபல பாடகி சுசித்ரா தனக்கு நேர்ந்த அனுபவங்களையும் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். இதில் பாடலாசிரியர் வைரமுத்து, உன் குரலில் காமம் இருக்குமா, வீட்டுக்கு வா உனக்கு பரிசு தர வேண்டும் என அழைத்தார். ஆனால் நான் என் பாட்டியுடன் சென்றதால் பேண்டீன் ஷாம்பூ பாட்டில்களைக் கொண்டு வந்து கொடுத்தார். 

கே பாலசந்தர்

அதற்கு பிறகும் என்னை பண்ணை வீட்டிற்கு அழைத்தார். ஆனால் நான் ஃபோனைக் கட் செய்து விடுவேன். சாகுற வரைக்கும் கே பாலச்சந்தர் Lusty man. இந்த மாதிரி ஆட்கள் சாகும் வரை இப்படி தான் இருப்பார்கள் என தெரிவித்துள்ளார்.  

ரஜினிகாந்த் போன்ற பல முக்கிய நடிகர்களை அறிமுகப்படுத்திய பிரபல இயக்குநர் கே.பாலசந்தர் குறித்து சுசித்ரா இவ்வாறு கூறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.