ஏன் அழுகனும்? கொக்கைன் அடிக்கையில் குழந்தை நினைவுக்கு வரலயா? ஸ்ரீகாந்த்தை விளாசிய பிரபலம்
ஸ்ரீகாந்த் விவகாரம் குறித்து பின்னணி பாடகி சுசித்ரா பேட்டியளித்துள்ளார்.
ஸ்ரீகாந்த் விவகாரம்
நடிகர் ஸ்ரீகாந்த் கொக்கைன் போதை பொருளை பயன்படுத்தியதன் காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து மகனை கவனித்துக்கொள்ள வேண்டும் எனவே தனக்கு ஜாமீன் வேண்டுமென்று மனு தாக்கல் செய்தார். ஆனால் அதனை நீதிமன்றம் நிராகரித்தது. இந்நிலையில் ஸ்ரீகாந்த் விவகாரம் குறித்து பேட்டியளித்துள்ள பின்னணி பாடகி சுசித்ரா,
விளாசிய சுசித்ரா
"ஸ்ரீகாந்த்துக்கு இப்போது ரசிகர்கள் திடீரென முளைத்திருக்கிறார்கள். இத்தனை வருடங்கள் அவருக்கு படங்கள் இல்லை. அப்போதெல்லாம் இவர்கள் எங்கே போயிருந்தார்கள்.
இப்போது ஏன் அழுவுகிறார்கள். குழந்தையை கவனிக்க வேண்டும் என்று ஸ்ரீகாந்த் நீதிமன்றத்தில் கலங்கியதை நினைத்து பலர் பரிதாபப்படுகிறார்கள்.
ஸ்ரீகாந்த் ஏன் இப்போது மகனை நினைத்து அழுக வேண்டும். கொக்கைன் அடிக்கும்போது மகனின் நினைப்பு வரவில்லையா?'. சினிமாவில் பலர் இந்த கொக்கைன் போதை பொருளை பயன்படுத்துகிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.