அடுத்தடுத்து ஸ்டம்புகளை தெறிக்கவிட்ட இஷாந்த் ஷர்மா! மிரண்டு போய் வெளியேறிய ஆர்ச்சர்

india test england cheeni
By Jon Feb 08, 2021 05:44 AM GMT
Report

இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி, சென்னையில் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 555 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது'

இந்நிலையில், இப்போட்டியின் போது 169.1 பந்தை இஷாந்த் ஷர்மா வீசிய போது, அதை எதிர்கொண்ட இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர், பந்தை அடிக்காமல் விக்கெட் கீப்பருக்கு விட்டார். ஆனால் பந்தானது அற்புதமாக ஸ்விங் ஆகி ஸ்டம்பை தூக்கியது.

இதனால் ஜோஸ் பட்லர் அப்படியே வெளியேறினார். இவரைத் தொடர்ந்து அடுத்து வந்த ஜோப்ரா ஆர்ச்சரையும் சொல்லி வைத்தது போல், அதே போன்று பந்து வீசி ஸ்டம்பை தெறிக்கவிட்டார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.