சாலையோரம்..மதுபோதையில் விழுந்து கிடந்த மாணவி - இறுதியில் அதிர்ச்சி!

Tamil nadu Salem
By Swetha Oct 04, 2024 03:31 AM GMT
Report

மதுபோதையில் விழுந்து 12ம் வகுப்பு மாணவி சாலையில் விழுந்து கிடந்தது அதிர்ச்சி அளித்துள்ளது.

மதுபோதை

சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள சாலையோரத்தில் மாலை வேளையில் 16 வயதுடைய மாணவி ஒருவர் மயங்கி கிடந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அந்த மாணவியின் பெற்றோர் அங்கு விரைந்து வந்தனர்.

சாலையோரம்..மதுபோதையில் விழுந்து கிடந்த மாணவி - இறுதியில் அதிர்ச்சி! | Student Was Found Unconscious On The Road

பின்னர் அவர்கள் மகளை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனிடையே அந்த மாணவியை சிலர் பாலியல் வன்கொடுமை செய்ததாக தகவல் பரவியது. அதைத்தொடர்ந்து போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்த மாணவி சேலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்ததும், மது போதையில் அவர் மயங்கி கிடந்ததும் தெரியவந்தது.

பள்ளியில் பீர் குடித்த மாணவிகள் - வைரலாகும் வீடியோ காட்சிகள்!

பள்ளியில் பீர் குடித்த மாணவிகள் - வைரலாகும் வீடியோ காட்சிகள்!

மாணவி 

இது தொடர்பாக போலீசார் கூறும்போது, மது போதையில் இருந்த அந்த மாணவியை 2 பேர் மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்து அழகாபுரம் பகுதியில் விட்டு சென்றுள்ளனர். தற்போது அவர்கள் யார்? என்பது குறித்து எந்த தகவலும் தெரியவில்லை.

சாலையோரம்..மதுபோதையில் விழுந்து கிடந்த மாணவி - இறுதியில் அதிர்ச்சி! | Student Was Found Unconscious On The Road

மேலும் அந்த மாணவி நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தினாரா? அல்லது யாராவது அவருக்கு குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்தார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறோம்.

மருத்துவர்கள் பரிசோதனையில் அந்த மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது என்றார்.