கல்விக்கு கண் கொடுக்கும் நிகழ்கால கர்மவீரரே - விஜய்க்கு பார்வையற்ற மாணவி புகழாரம்!

Vijay Tamil nadu Chennai Thamizhaga Vetri Kazhagam
By Jiyath Jul 03, 2024 07:36 AM GMT
Report

நடிகர் விஜய் குறித்து கல்வி விருது விழாவில் பார்வையற்ற மாணவி ஒருவர் பேசியுள்ளார். 

கல்வி விருது விழா

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா இன்று நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகையை வழங்கி வருகிறார்.

கல்விக்கு கண் கொடுக்கும் நிகழ்கால கர்மவீரரே - விஜய்க்கு பார்வையற்ற மாணவி புகழாரம்! | Student Says Actor Vijay Like Present Kamarajar

அப்போது மேடையில் புதுச்சேரியை சேர்ந்த பார்வையற்ற மாணவி சண்முகப்பிரியா என்பவர் பேசினார். அவர் பேசி முடிக்கும் வரை விஜய் அவருக்கு மைக்கை பிடித்தபடி நின்று கொண்டிருந்தார். அந்த மாணவி கூறியதாவது "விஜய் அண்ணா, உங்கள் குரலைக் கேட்க வந்திருக்கிறேன்.

நீட் தேர்வு குறித்த தவெக தலைவர் விஜய் கருத்தை காங்கிரஸ் வரவேற்கிறது - செல்வப்பெருந்தகை!

நீட் தேர்வு குறித்த தவெக தலைவர் விஜய் கருத்தை காங்கிரஸ் வரவேற்கிறது - செல்வப்பெருந்தகை!

கர்மவீரரே 

உங்களை ஒரு நல்ல மனிதராகவும் நல்ல தலைவராகவும் உணர்கிறேன் அண்ணா. இங்கு மதிப்பெண் பெற்று சாதனை படைத்ததை விட எங்களையும் எங்கள் பெற்றோரையும் அழைத்து மகிழ்வித்துள்ளீர்கள்.

கல்விக்கு கண் கொடுக்கும் நிகழ்கால கர்மவீரரே - விஜய்க்கு பார்வையற்ற மாணவி புகழாரம்! | Student Says Actor Vijay Like Present Kamarajar

தமிழகத்தின் தளபதியே கல்விக்கு கண் கொடுக்கும் நிகழ்கால கர்மவீரரே உங்களை காண முடியவில்லை என்றாலும் உங்கள் அறிவுரைகளை உள்வாங்கி மகிழும் மாணவி நான். உங்கள் பணி மேலும் தொடர என்னுடைய வாழ்த்துகள். இங்கு பேச வாய்ப்பளித்த தளபதி விஜய் அண்ணாவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.