அதிமுகவில் இருந்து அதிரடி நீக்கம் - கட்சி பொறுப்புகள் பறிப்பு!
40 பேரை அதிமுகவின் பொறுப்புகளில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கியுள்ளார்.
ஆதரவாளர்கள் நீக்கம்
செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
மேலும், இது தொடர்பான நடவடிக்கையை 10 நாட்களுக்குள் எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்தார். இதனைத் தொடர்ந்து அவரது கட்சி பொறுப்புகளை எடப்பாடி பழனிசாமி பறித்தார்.
இபிஎஸ் அதிரடி
அவரது ஆதரவாளர்களின் பொறுப்புகளும் பறிக்கப்பட்டன. பின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள தன் இல்லத்தில் செங்கோட்டையன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்நிலையில், செங்கோட்டையன் ஆதரவாளர்கள் மேலும் 40 பேரை அதிமுகவின் பொறுப்புகளில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கியுள்ளார்.
ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளைய நிர்வாகிகளின் கட்சி பொறுப்புகள் பறிக்கப்பட்டுள்ளன.