சூறாவளி காற்றுடன் கடும் மழை, பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் - 13 பேர் உயிரிழப்பு!

Brazil Death
By Vinothini Jun 19, 2023 06:33 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

 சூறாவளி காற்றுடன் கடுமையாக மழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

வெள்ளப்பெருக்கு

பிரேசில் நாட்டில் ஷியோகிராண்ட டொசூல் மாநிலத்தில் கடும் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தது மற்றும் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தது.

storm-hits-brazil-13-people-were-dead

விடாமல் தொடர்ந்து பெய்த மழையால் ஆறுகள் போல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்ததில் மக்கள் வெளியே தப்பி செல்ல முடியாமல் தவித்தனர். அவர்கள் மீட்பு குழு மூலம் நெடு நேர போராட்டத்தினிற்கு பிறகு மீட்கப்பட்டனர்.

உயிரிழப்பு

இந்நிலையில், இந்த வெள்ளத்தில் சிக்கிய 3,713 பேரை அவர்கள் பத்திரமாக மீட்டனர். மேலும், 20-க்கும் மேற்பட்டவர்களை வெள்ளம் அடித்து சென்றது. அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் அதிரடியாக மீட்கப்பட்டனர்.

storm-hits-brazil-13-people-were-dead

இந்த சூறாவளி புயலுக்கு 4 மாத குழந்தை உள்பட 13 பேர் பலியாகிவிட்டனர். தொடர்ந்து, 20க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை மாயமாகிவிட்டனர், அவர்களை தேடி வருகின்றனர். இதில் மீட்கப்பட்டவர்களை தற்காலிகமாக விளையாட்டு மைதானத்தில் தங்கவைத்துள்ளனர்.

முன் எச்சரிக்கையினால் சில வீடுகள் அப்புறடுத்தப்பட்டது, அதனால் பெருமளவில் சேதம் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.