தமிழ்நாட்டில் இந்தி மாத கொண்டாட்டம் வேண்டாம் - மோடிக்கு அவசர கடிதம் எழுதிய ஸ்டாலின்

M K Stalin R. N. Ravi Narendra Modi Chennai
By Karthikraja Oct 18, 2024 09:36 AM GMT
Report

இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மாத கொண்டாட்டம் வேண்டாம் என ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியா மாத கொண்டாட்டம்

சென்னை தொலைக்காட்சி நிலையமான 'டிடி தமிழ்' சார்பில் இன்று மாலை, இந்தி மாத கொண்டாட்டங்களின் நிறைவு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார். 

rn ravi

முன்னதாக, பொதிகை என்ற பெயரில் செயல்பட்ட தொலைக்காட்சி டிடி தமிழ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கும், டிடி தமிழ் தொலைக்காட்சிக்கு காவி நிறத்தில் லோகோ உருவாக்கப்பட்டதற்கும் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. 

இன்றும் எங்களை இளமையாக இயக்குவது இவை மூன்றும்தான் - முதல்வர் ஸ்டாலின்

இன்றும் எங்களை இளமையாக இயக்குவது இவை மூன்றும்தான் - முதல்வர் ஸ்டாலின்

ஸ்டாலின் கடிதம்

இன்று நடைபெற உள்ள இந்திமாத நிறைவு விழா நிகழ்ச்சிக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

stalin

இந்த கடிதத்தில், "இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்த மொழிக்கும் தேசிய மொழி என்ற அந்தஸ்தை வழங்கவில்லை என்றும் சட்டமியற்றுதல், நீதித்துறை மற்றும் தகவல் தொடர்பு போன்ற அலுவல் நோக்கங்களுக்காக மட்டுமே இந்தி மற்றும் ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது.

இந்தியா போன்ற பல்வேறு மொழிகள் பேசும் நாட்டில், இந்திக்கு தனி இடம் அளிப்பதும், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மாதம் கொண்டாடப்படுவதும் பிற மொழிகளை சிறுமைப்படுத்தும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

உள்ளூர் மொழி

எனவே, "இந்தி பேசாத மாநிலங்களில் இதுபோன்ற இந்தி மொழி சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்துவதைத் தவிர்க்கலாம் அல்லது ஒன்றிய அரசு இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த விரும்பினால், அந்தந்த மாநிலங்களின் உள்ளூர் மொழிக்கான மாதக் கொண்டாட்டங்களையும் அதேபோல் கொண்டாடவேண்டும்" என்றும் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், "இந்திய அரசு செம்மொழியாக அங்கீரித்துள்ள அனைத்து மொழிகளின் சிறப்பையும் செழுமையையும் கொண்டாட இதேபோன்று சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்று தாம் பரிந்துரைப்பதாகவும் இது அனைவரிடையேயும் ஒரு சுமுகமான உறவை மேம்படுத்தும்" எனவும் தெரிவித்துள்ளார்.