சட்ட அகாடமியில் நடிகர் சூர்யாவின் பங்களிப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!

Suriya M K Stalin
By Vinothini Jul 17, 2023 05:16 AM GMT
Report

 நடிகர் சூர்யாவின் பங்களிப்புக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சத்யதேவ் அகாடமி

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முகாம் அலுவலகத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் "சத்தியதேவ்" அவர்களின் நினைவாக சட்டம் பயிலும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் "சத்தியதேவ் லா அகாடமி"யை தொடங்கி வைத்தார்.

stalin-appreciates-suriya

இந்த அகாடமியில் எடுக்கப்படும் பாடங்களை யூடியூப் வாயிலாக இலவசமாக வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதில் நடிகர் சூர்யா தனது பங்களிப்பை கொடுக்கும் வகையில் பாடத்திட்ட காணொலி தயாரிப்பதற்கான நிதியை ஜெய்பீம்‌ படத்தயாரிப்பாளர்‌, நடிகர்‌ சூர்யா அவர்களின்‌ “20 எண்டர்டெயின்மெண்ட்‌” நிறுவனம்‌ வழங்கிட உள்ளது.

ஸ்டாலின் பாராட்டு

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூர்யாவை பாராட்டு தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், "சமூகத்தில் கல்வியும் வேலைவாய்ப்பும் ஒரு சாராருக்கு மட்டுமே சொந்தமல்ல என்று போராடி சமூக நீதி அடிப்படையில் உரிமைகளைப் பெற்றோம். 1961-ஆம் ஆண்டு வழக்கறிஞர் சட்டம் இயற்றப்பட்ட பிறகும், இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்ட பிறகுமே எளிய மக்களும் சட்டத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

stalin-appreciates-suriya

எளிய பின்புலங்களில் இருந்து வரும் அவர்களது திறன்களை வளர்க்க, ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துருவை இயக்குநராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள சத்ய தேவ் சட்ட அகாடமியை தொடங்கி வைத்தேன். இதில், ஏழை - எளிய மக்களின் கல்விக்காக உள்ளார்ந்த அக்கறையோடு தொடர்ச்சியாகச் செயல்பட்டுவரும் அன்புக்குரிய தம்பி நடிகர் சூர்யாவின் அவர்களின் பங்களிப்பைப் பாராட்டுகிறேன்.

சட்டத்தொழிலும் மருத்துவத் தொழிலும் மற்ற தொழில்கள் போல் அல்ல. மற்றவை பணி புரிவது; இவை பயிற்சி செய்வது!. நான்_முதல்வன் திட்டத்தின்கீழ், மாணவர்களுக்கு இந்த அகாடமியின் மூலம் பயிற்சி அளிக்கக் கேட்டுக் கொண்டுள்ளேன். நீதியரசர் சந்துரு அவர்களோடு, ஜெய் பீம் திரைப்படத்திற்குப் பிறகும் தொடர்ந்து சமூக அக்கறையோடு செயல்பட்டுவரும் தம்பி சூர்யா, இயக்குநர் ஞானவேல் ஆகியோருக்கு மீண்டுமொருமுறை வாழ்த்துகள்!" என்று கூறியுள்ளார்.