3 பெரிய தலைவர்களுக்கு பேராபத்து.. அடுத்த வருடத்திற்குள் நடக்கும் - குண்டை தூக்கி போடும் மடாதிபதி!

Karnataka India
By Vinothini Aug 19, 2023 05:12 AM GMT
Report

அடுத்த ஆண்டிற்குள் பெரிய தலைவர்களுக்கு பிரச்னை நடக்கும் என்று மடாதிபதி கூறியுள்ளார்.

மடாதிபதி கணிப்பு

கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டம் அரசிகெரே அருகே ஹாரனஹள்ளி கிராமத்தில் அமைந்துள்ள கோடிமடம் உள்ளது. இதன் மடாதிபதியாக ஸ்ரீசிவானந்த் சிவயோகி ராஜேந்திரா சுவாமிகள் உள்ளார்.

sri-shivananda-swamiji-predicts-and-warns-people

இவர் அரசியல் மாற்றம், கட்சி தலைவர்களின் எதிர்காலம், மழைப்பொழிவு உள்ளிட்டவை குறித்து கணித்து சொல்வது வழக்கம். தற்பொழுது இவர் நாட்டு மக்களுக்கு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.

தலைவர்களுக்கு ஆபத்து

இதனை தொடர்ந்து, மடாதிபதி பெரிய நகரங்கள் பிரச்சினைகளை சந்திக்கும் என்றும், உயரமான கட்டடங்கள் இடிந்து விழும் என்றும் அவர் கூறியுள்ளார். அதிலும் ,குறிப்பாக அடுத்த ஆண்டுக்குள் நாட்டில் பேராபத்து ஏற்படலாம் என்று அவர் கணித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

sri-shivananda-swamiji-predicts-and-warns-people

2024 உகாதி பண்டிகைக்கு முன்பு நாட்டில் பெரிய பெரிய தலைவர்களுக்கு பிரச்சினை ஏற்படலாம் என்றும், அதிலும் குறிப்பாக 3 பெரிய மனிதர்கள் ஆபத்தில் உள்ளனர் என்று தெரிவித்து பெரிய குண்டை தூக்கி போட்டுள்ளார்.