நீ பிராடுனு உலகத்துக்கே தெரியும்; செருப்பு வேண்டுமா - விஷாலை மறைமுகமாக சாடும் நடிகை ஸ்ரீ ரெட்டி?

Vishal Tamil Cinema Tamil Actress
By Karthikraja Aug 29, 2024 01:51 PM GMT
Report

நீ பெரிய பிராடுனு உலகத்துக்கே தெரியும் என நடிகை ஸ்ரீ ரெட்டி பதிவிட்டுள்ளார்.

ஹேமா ஆணையம்

மலையாள சினிமா துறையில் நடைபெற்று வரும் பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஹேமா ஆணையம் அமைக்கப்பட்டது. கடந்த வாரம் ஹேமா ஆணைய அறிக்கை வெளியாகி மலையாள திரை உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. 

hema commission report

சில நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி வருகின்றனர். மோகன்லால் தலைமையிலான மலையாள நடிகர் சங்கம் கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது. 

உப்புமா கம்பெனிகளால் பாலியல் தொல்லை; ஸ்ரீரெட்டி செய்த சேட்டைதான் தெரியும் - விஷால்

உப்புமா கம்பெனிகளால் பாலியல் தொல்லை; ஸ்ரீரெட்டி செய்த சேட்டைதான் தெரியும் - விஷால்

விஷால்

இந்நிலையில் நடிகர் விஷால் தனது பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் வசிப்பவர்களுக்கு காலை உணவினை வழங்கி விட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது "ஹேமா ஆணையம் போல் தமிழ் சினிமாவில் உள்ள பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க விரைவில் குழு அமைக்கப்படும், அட்ஜஸ்ட்மென்ட் கேட்பவர்களை செருப்பால் அடிக்க வேண்டும்" என பேசினார். 

vishal

நடிகை ஸ்ரீரெட்டி என்பவர் உங்கள் மீது புகார் கொடுத்துள்ளார் என்ற கேள்விக்கு, "ஸ்ரீரெட்டி யார் என்பதே எனக்கு தெரியாது. அவர் செய்த சேட்டைதான் எனக்கு தெரியும். யார் மீது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் குற்றம் சாட்டலாம். என்ன நடந்தது என்ற உண்மை தெரிய வேண்டும்." என பேசினார்.

ஸ்ரீரெட்டி

இந்நிலையில் நடிகை ஸ்ரீ ரெட்டி விஷாலை மறைமுகமா சாடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். இந்த பதிவில், "ஒரு பெண்ணைப் பற்றிய ஒரு கருத்தைச் சொல்வதற்கு முன்னால் உன் நாக்கு கவனமாக இருக்க வேண்டும். பெண்களைப் பற்றி அவதூறாக பேசுவது, சுற்றி இருப்பவர்களுக்கு எப்போதும் தொந்தரவு கொடுப்பதும் எல்லாருக்கும் தெரியும். நீ எவ்வளவு பெரிய பிராடு என்று உலகத்திற்கே தெரியும். 

ஊடகத்தின் முன் உன்னைப் பற்றிய இத்தனை உண்மைகள் தெரிந்தபின்னும் உன்னை ஜெண்டில்மேன் என்று மக்கள் நம்புவார்கள் என்று நினைக்காதே. உன் வாழ்க்கையில் இருந்த பெண்கள் ஏன் உன்னை விட்டு விலகினார்கள்? உன் திருமண நிச்சயதார்த்தம் நின்றுபோனது எல்லாம் ஏன் என்கிற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு. என்னிடம் நிறைய செருப்புகள் இருக்கின்றன. அதில் ஒன்று உனக்கு வேண்டுமா?" என பதிவிட்டுள்ளார்.