போராட்டத்திலும் கருணை காட்டிய இலங்கை மக்கள் : வைரலாகும் வீடியோ

Gotabaya Rajapaksa Sri Lankan political crisis Viral Photos
By Irumporai Jul 14, 2022 02:14 PM GMT
Report

இலங்கை போராட்டக்காரர்களின் கருணை செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இலங்கை போராட்டம்

இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் அதிபர் மாளிகையினை போராட்டக்காரர்கள் கைபற்றினர், போராட்டம் பெரிதானதை தொடர்ந்துஅதிபர் கோத்தபயராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறினார்.

போராட்டத்திலும் கருணை காட்டிய இலங்கை  மக்கள் : வைரலாகும் வீடியோ | Sri Lankan Protesters Helping Dog

இந்த நிலையில் அதிபர் மாளிகையில் போராட்டக்கரர்கள் செய்த வேடிக்கை நிகழ்வுகள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் போராட்டக் கலத்தில் இருந்த தெரு நாய் ஒன்று மயங்கிய நிலையில் உள்ளதாக தெரிகிறது.

 எதிர்ப்பாளர்களின் கருணை செயல்

அப்போது அங்கு போராட்டக் களத்தில் கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்த நாய்க்கு தண்ணீர் கொடுத்து மயக்கத்தினை தெளிய வைத்தனர்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இலங்கையில் அதிபர் மாளிகையில் உள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் , "அமைதியாக வெளியேறுவதாக தெரிவித்துள்ளனர்.