பற்றி எரியும் இலங்கை - அதிபர் மாளிகை சூறையாடல் - வைரலாகும் வீடியோ தொகுப்பு

Sri Lanka
By Nandhini Jul 09, 2022 08:44 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

இலங்கை பொருளாதாரம்

இலங்கையில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். அந்நாட்டில் எரிபொருட்கள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதால் மக்கள் தவியாய் தவித்து வருகின்றனர்.

ஊரடங்கு உத்தரவு கடந்த சில மாதங்களாக ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அதிபர் கோத்த பய ராஜபக்ச பதவி விலக கோரி இலங்கையில் மக்கள் மீண்டும் போராட்டத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து, இலங்கையில் நேற்று இரவு 9 மணி முதல் மறு அறிவிப்பு வரும் வரை 7 பிரதேசங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்திருந்தது.

sri lanka

இலங்கை அதிபர் மாளிகை சூறையாடல்

கோத்த பய ராஜபக்ஷவின் அதிபர் மாளிகையில் பாதுகாப்பிற்காக இருந்த வீரர்கள் பணியில் இருந்து விலகி உள்ளனர் இதனையடுத்து போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகை கொள்ளும் ஆவேசமாக பிரவேசித்து உள்ளனர் , இதனையடுத்து அதிபர் கோட்டபய தப்பி ஒடியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கோத்த பய ராஜபக்சே தப்பியோட்டம்

இலங்கை அதிபர் கோத்த பய ராஜபக்சே அதிபர் மாளிகையிலிருந்து தப்பியோடியதாக தகவல் வெளியாகி உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரண்ட ஆயிரக்கணக்கானோர் கோத்தபய ராஜபக்சே வீட்டை முற்றுகையிட்டதையடுத்து தப்பியோடியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.        

வைரலாகும் வீடியோ

கோத்த பய ராஜபக்சே தப்பியோட்டம் - மாளிகையை முற்றுகையிட்டவர்கள் மீது கண்ணீர்ப் புகை வீச்சு - இலங்கையில் பரபரப்பு