திமுக தேர்தல் அறிக்கையின் சிறப்பு அம்சங்கள்

special election dmk stalin
By Jon Mar 13, 2021 12:42 PM GMT
Report

திமுக தேர்தல் அறிக்கையை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். திமுக தேர்தல் அறிக்கைதான், தேர்தல் கதாநாயகன் - மு.க.ஸ்டாலின்.நேற்று வேட்பாளர் பட்டியலை தொடர்ந்து, தேர்தல் அறிக்கை இரண்டாவது கதாநாயகன் மு.க.ஸ்டாலின் என தெரிவிக்கப்பட்ட நிலையில்.டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருக்குறளை தேசிய நூலாக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். அமைச்சர்கள் மீதான ஊழலை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும். அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்படும். சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

கொரோனா நிவாரணத்தொகையாக ரூ.4000 வழங்கப்படும். பெட்ரோல் விலை ரூ.5, டீசல் விலை ரூ.4 குறைக்கப்படும். ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 கொடுக்கப்படும். ரேசனில் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும். இந்து ஆலயங்கள் புனரமைப்பு பணிக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் புனரமைப்புக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ஏழை மக்கள் பசிதீர முதல் கட்டமாக 500 இடங்களில் கலைஞர் உணவகம் அமைக்கப்படும்.

தமிழக ஆறுகள் மாசடையாமல் தடுக்க ஆறுகள் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். பத்திரிக்கையாளர், ஊடகத்துறையினர் நலனுக்கு தனி வாரியம் அமைக்கப்படும். ஆட்டோ ஓட்டுநர்கள் சொந்தமாக ஆட்டோ வாங்கிட ரூ.10,000 மானியம். முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்கப்படும். கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்.

அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் 70 வயதுக்கு மேல் 10%, 80 வயதுக்கு மேல் 10% உயர்த்தி வழங்கப்படும். முக்கிய மலை கோவில்களில் கேபிள் கார் வசதி. இந்து ஆலய புனரமைப்பிற்கு ரூ 1000 கோடி ஒதுக்கீடு. தேவாலயங்கள் புனரமைப்பிற்கு ரூ 200 கோடி ஒதுக்கீடு. 32 லட்சம் கைம்பெண்கள், மாற்று திறனாளிகள் ஓய்வூதியம் 1500 ரூபாயாக உயர்த்தப்படும். ஏழை மக்கள் உணவருந்த 1500 இடங்களில் கலைஞர் உணவகம். கலைஞர் காப்பீடு திட்டம், வருமுன் காப்பீடு திட்டம் மேம்படுத்தப்படும்.

தமிழ்நாடு ஆறுகள் மேம்பாடு திட்டம் உருவாக்கப்படும். பணிக்காலத்தில் இறக்கும் ஆசிரியர், அரசு ஊழியர் குடும்பங்களுக்காக நிதி 5 லட்ச ரூபாய். சிறு,குறு விவசாயிகள் மின் மோட்டார்கள் வாங்க நிதி. மகளிர் பேறு கால உதவித்தொகை 24,000 ரூபாயாக உயர்வு. நீட் தேர்வை ரத்து செய்ய முதல் சட்டப்பேரவை கூட்டத்தில் தீர்மானம். 50 லட்சம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி. 3.5 லட்சம் கல்வி பணியிடங்கள் நிரப்பப்படும். 2 லட்சம் வேலை வாய்ப்புகள் புதிதாக உருவாக்கப்படும்.

வேலை இல்லா பட்டதாரிகள் குறுத் தொழில் தொடங்க 20 லட்ச ரூபாய் கடன். கனிமங்கள், தாது மணல் ஆகியவற்றை அரசே நடத்தும். அரசு துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள தற்காலிக பணியாளர்கள் நிரந்தரம். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதியம். கரும்புக்கு ஆதார விலை டன் ஒன்றுக்கு ரூ 4000. உழவர் சந்தை அனைத்து நகரங்களுக்கும் விரிவாக்கப்படும். நீர் மேலாண்மை ஆணையம் அமைந்திட சட்டம் கொண்டு வரப்படும். 2000 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணைகள் கட்டப்படும்.

அதிமுக அரசால் ஏற்படுத்தப்பட்ட கடன் சுமையை தீர்க்க பொருளாதார மேலாண்மை குழு. பொது பட்டியலில் உள்ள கல்வி பட்டியலை மாநில பட்டியலில் கொண்டு வர நடவடிக்கை. 8 ஆம் வகுப்பு வரை தமிழை கட்டாய பாடமாக்க நடவடிக்கை. வேளாண்மை துறைக்கு என்று தனி நிதி நிலை அறிக்கை. இயற்கை வேளாண்மைக்கு என்று தனிப்பிரிவு.

இலங்கை இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்த மத்திய அரசை வலியுறுத்த நடவடிக்கை. மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும். பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம். தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வழங்க வற்புறுத்தல். பள்ளி மாணாக்கர்களுக்கு காலையில் ஊட்டச் சத்தாக பால் வழங்கப்படும். 100 நாட்கள் வேலைத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும். மகளிர் சுயஉதவிக் குழுக்களின் நிலுவையில் உள்ள கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்படும்.

வள்ளலார் பெயரில் சர்வதேச மையம். இந்து கோவில்களுக்கு ஆன்மீக சுற்றுலா செல்ல 1 லட்சம் பேருக்கு நிதி. தமிழகத்தில் ரயில் பாதை இல்லாத 16 வழித்தடங்களில் ரயில் பாதை அமைக்க வலியுறுத்தல். பள்ளி மாணவர்களுக்கு காலையில் ஊட்டசத்தாக பால் வழங்கப்படும் கூட்டுறவு வங்களில் 5 பவுன்களுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி மகளிர் சுய உதவி குழுவினரின் நிலுவையில் உள்ள கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடி திட்டங்கள் செயலாக்க அமைச்சகம் என தனி அமைச்சகம் அமைக்கப்படும் மாதம் தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை மீண்டும் கொண்டு வரப்படும்.

  ரேஷன் கடைகளில் ஒவ்வொரு கார்டுக்கும் கூடுதலாக 1 கிலோ சர்க்கரை வழங்கப்படும் உளுந்தம் பருப்பு மீண்டும் வழங்க நடவடிக்கை திருக்குறளை தேசிய நூலக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம் அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படும் சட்டசபை நிகழ்ச்சிகள் நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப ஏற்பாடு பொங்கல் திருநாள் பண்பாட்டு திருநாளாக கொண்டாட்டம்