பொய் வழக்கு போடும் காவல் துறை - பொதுக்குழு கூட்டத்தில் எச்சரித்த அதிமுக எஸ். பி வேலுமணி..!

Tamil nadu ADMK Edappadi K. Palaniswami
By Karthick Dec 27, 2023 06:59 AM GMT
Report

நடைபெற்று முடிந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி காவல்துறைக்கு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதிமுக பொதுக்கூட்டம்

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

sp-velumani-issues-warning-to-police-dept-of-tn

இந்த கூட்டத்தில் பேசிய எஸ்.பி வேலுமணி கூறுகையில் “அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு உட்பட எண்ணற்ற பணிகளை செய்தவர், ஏழை, எளிய மக்களுக்கான அரசை நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி என புகழாரம் சூட்டினார்.

எச்சரிக்கை

தற்போதுள்ள முதல்வர் பொய் வாக்குறுதிகளை தந்து மக்களை வஞ்சித்து வருவதாக விமர்சனம்ஸ் செய்த அவர், புயல் மழையால் பாதித்த மக்களை பார்க்காமல், டில்லியில் இண்டியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துக்கொண்டார் முதல்வர் ஸ்டாலின் என்று சுட்டிக்காட்டி விமர்ன்சம் செய்தார்.

sp-velumani-issues-warning-to-police-dept-of-tn

முக ஸ்டாலினின் இந்த செயலை கண்டிக்காமல், வாய் மூடி மௌனமாக, திமுகவுக்கு அடிமை போல திமுகவின் கூட்டணி கட்சிகள் இருக்கின்றன என குற்றம்சாட்டிய அவர்,

தவழ்ந்து சென்று முதல்வரானவர் - உதயநிதியை பற்றி பேச அருகதை இல்லை - திமுக சாடல்..!!

தவழ்ந்து சென்று முதல்வரானவர் - உதயநிதியை பற்றி பேச அருகதை இல்லை - திமுக சாடல்..!!

அதிமுக ஐடி விங் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்யும் காவல் துறையினருக்கு ஒரு எச்சரிக்கை எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வருவார் பார்த்து கவனமாக இருந்துகொள்ளுங்கள் என்றும் எச்சரிக்கை செய்துள்ளார்.