ஆண்களை மாமியார் வீட்டிற்கு வாழ அனுப்பும் வினோத ஊர் - சுவாரஸ்ய பின்னணி!

Tamil nadu India
By Vinothini Oct 27, 2023 10:18 AM GMT
Report

மாமியார் வீட்டிற்கு ஆண் மகனை வாழ அனுப்பும் சமூகத்தினர் பற்றி பார்க்கலாம். n

புகுந்த வீடு

திருமணம் முடிந்ததும், மாப்பிள்ளை வீட்டிற்கு பெண்ணை அனுப்பி வைப்பது தான் ஊரறிந்த வழக்கம். ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தில் 16 ஊர்களில் பெண் வீட்டுக்கு மாப்பிள்ளை வாழச் செல்லும் வித்தியாசமான பழக்கவழக்கம் இன்னும் நடைமுறையில் இருந்து வருகிறது. இது பெண்களுக்கு அதிக உரிமைகளை கொடுக்கும் வகையில் நன்குடி வேளாளர் சமூகத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

sons-sent-to-live-in-mother-in-law-home-tuticorin

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிவகளை, தட்டப்பாறை, ஏரல், பாண்டியாபுரம், சொக்கலிங்கபுரம், ராமச்சந்திராபுரம், கூட்டுடன்காடு, செக்காரக்குடி, புதூர், உள்ளிட்ட 16 ஊர்களில் நன்குடி வேளாளர் சமூக மக்கள் இந்த சடங்குகள் சம்பிரதாயத்தை வழக்கமாக பின்பற்றி வருகிறார்கள்.

போலீஸ் ஜோடியின் ப்ரீ வெட்டிங் ஃபோட்டோஹூட் - தாறுமாறாக வைரலாகும் வீடியோ!

போலீஸ் ஜோடியின் ப்ரீ வெட்டிங் ஃபோட்டோஹூட் - தாறுமாறாக வைரலாகும் வீடியோ!

பின்னணி

இந்நிலையில், நன்குடி வேளாளர் சமூகத்தில் பெண் குழந்தையை பெற்றவர்கள் தங்கள் வாழ்நாளின் இறுதிவரை மகளுடன் தான் வசிப்பார்கள். மகன்களை மருமகள் வீட்டுக்கு வாழ அனுப்பி வைத்துவிடுவார்கள். பெண் வீட்டார் மாப்பிள்ளை கேட்டுச் செல்வதை அறிந்திருப்பீர்களா, அதுவும் நன்குடி வேளாளர் சமூகத்தில் இருக்கும் ஒரு பழக்கவழக்கம்.

sons-sent-to-live-in-mother-in-law-home-tuticorin

வீட்டோட மாப்பிள்ளை என்பதை காலம் காலமாக உள்ள பாரம்பரிய பழக்க வழக்கமாக கருதுகின்றனர். பெண் வீட்டுக்கு வரும் மருமகன்கள் தங்கள் மாமனார், மாமியாரை பெற்றோர்கள் போல் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதும்

சொத்து வரி உட்பட எதுவாகினும் அது பெண்கள் பெயரிலேயே கட்ட வேண்டும் என்பதும் ஆண்டாண்டு காலமாக உள்ள நடைமுறையாகும். மொத்தத்தில் எல்லாமே பெண்ணுரிமையை மையப்படுத்தியதாக இருக்கும் இவர்களது பழக்கவழக்கம்.