திடீர் உடல்நலக்குறைவு - சோனியா காந்திக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சோனியா காந்தி
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி டெல்லியிலுள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வயிறு சம்பந்தமான பிரச்சனைக்காக இரைப்பை சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் அவர் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மருத்துவமனையில் அனுமதி
சில நாட்களுக்கு முன்பு தனிப்பட்ட பயணமாக தனது மகள் பிரியங்கா காந்தியுடன் சிம்லாவுக்கு சென்றிருந்தார். அங்கு அவர் சோர்வாக உணரவே உடனடியாக இந்திரா காந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததாகவும், அவர் வழக்கமான பரிசோதனைக்குதான் மருத்துவமனைக்கு வந்ததாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.