22 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்ட தந்தை - காத்திருந்து பழி தீர்த்த மகன்

Gujarat Rajasthan Murder
By Karthikraja Oct 06, 2024 09:50 AM GMT
Report

 தந்தையை கொன்றவரை 22 வருடம் கழித்து மகன் பழி தீர்த்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கொல்லப்பட்ட தந்தை

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மார் பகுதியை சேர்ந்தவர் கோபால் சிங்(30). இவருக்கு 8 வயதாக இருக்கும் போது இவரது தந்தை ஹரி சிங்கை டிரக் ஏற்றி நக்ஹட் சிங் பட்டி என்பவர் கொலை செய்துள்ளார். 

jaisalmer

இந்த கொலை வழக்கில் நக்ஹட் சிங் பட்டி மற்றும் மற்றும் அவரது 4 சகோதரர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

பழி தீர்த்த மகன்

ஆனால் சிறு வயது முதலே அடிக்கடி அவரது தந்தையை கொன்றவர்களை பற்றி உறவினர்களிடம் கோபால் சிங் விசாரித்து வந்தார். அப்போது முதலே தந்தையை கொன்றவரை பழிவாங்கும் முடிவில் இருந்துள்ளார். 

murder

நக்ஹட் சிங் குஜராத்தில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் பாதுகாவலராக பணியாற்றி வந்துள்ளார். அன்று தனது இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது, கோபால் சிங் தனது தந்தையை கொன்றது போல் டிரக்கை ஏற்றி கொலை செய்துள்ளார்.

இதன் பின் கோபால் சிங்கை கைது செய்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், கடந்த வாரம்தான் லோன் மூலம்புதிய டிரக் ஒன்றை வாங்கியுள்ளார். மேலும் நக்ஹட் சிங் இருந்த பகுதியை அடிக்கடி கோபால் நோட்டமிட்டு வந்துள்ளது அவரது செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்தபோது தெரிய வந்தது.