இறந்த தந்தையின் சடலத்தின் முன் திருமணம் செய்த மகன் - உருக்கமான நிகழ்வு

Marriage Death Kallakurichi
By Sumathi Mar 21, 2023 09:52 AM GMT
Report

தந்தை சடலத்தின் முன் மகன் திருமணம் செய்த சம்பவம் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தை இறப்பு

கள்ளக்குறிச்சி அருகே உள்ள பெருவங்கூர் கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் அய்யம்மாள். இவரது கணவர் ராஜேந்திரன். இவர்களது மகன் பிரவீன் என்பவருக்கு திருமணம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.

இறந்த தந்தையின் சடலத்தின் முன் திருமணம் செய்த மகன் - உருக்கமான நிகழ்வு | Son Married Fathers Body Near Kallakurichi

இதற்கிடையில், உடல் நலக்குறைவால் ராஜேந்திரன் உயிரிழந்தார். இந்த நிகழ்வு குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து சென்னையைச் சேர்ந்த மணப்பெண் சொர்ணமால்யா இந்த இறுதிச் சடங்கிற்கு வந்துள்ளார்.

மகன் திருமணம்

அப்போது பிரவீன் எனது அப்பாவின் ஆசிர்வாதத்துடன் நாம் இருவரும் திருமணம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். அதற்கு மணப்பெண் சம்மதம் தெரிவித்த நிலையில்,

இருவரும் தங்களை திருமணக் கோலத்தில் அலங்கரித்துக் கொண்டு உயிரிழந்த தந்தை சடலத்தின் முன்பே திருமணம் செய்து கொண்டனர்.