பெற்ற தாயை கூறு போட்டு, பிரிட்ஜில் அடைத்து கால்வாயில் வீசிய மகன் - கொடூர கொலை!

Attempted Murder Belgium Crime Death
By Vinothini Jul 29, 2023 07:02 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

 இளைஞர் ஒருவர் தனது தாயை துண்டு துண்டாக வெட்டி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கால்வாயில் மிதந்த பெட்டி

பெல்ஜியம், லீஜ் நகரின் புறநகர் பகுதியில் உள்ள கால்வாயில் கடந்த செவ்வாய்க்கிழமை பெட்டி ஒன்று மிதந்து கொண்டிருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அதனை எடுத்தனர், அப்பொழுது அது குளிர்சாதன பேட்டி என்று தெரியவந்தது.

son-killed-his-mom-thrown-fridege-with-body-parts

அதனை திறந்தபொழுது, அதில் கை கால்கள், போன்ற உடல் பாகங்கள் கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அதனை ஆய்வு செய்தனர். அப்பொழுது அது 70 வயதான ஒரு பெண்ணுடைய பாகங்கள் என்று தெரியவந்தது. மேலும், இவரது தலை, மற்றும் பிற உடல்பாகங்கள் அருகில் உள்ள குப்பை குவியலில் கிடந்துள்ளது.

விசாரணை

இந்நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தினர், அப்பொழுது இந்த பெண்ணை கொலை செய்தது அவரது மகன் என்று தெரியவந்தது. மேலும், இவரது மகன் 30 வயதான பிரஸ்ஸல்ஸ் என்பவர், இவர் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு ஓட்டலில் இருந்து விடியற்காலையில் கைது செய்தனர்.

son-killed-his-mom-thrown-fridege-with-body-parts

இவரை விசாரணை நடத்திய பொழுது தனது தவறை ஒப்புக்கொண்டார். தொடரந்து, லீஜின் தென்மேற்குப் பகுதியான செராயிங்கில், அந்தப் பெண் தனது இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு பேரக்குழந்தையுடன் வசித்து வந்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு சமையத்தில் இவரது மகனும் ஐவரும் சேர்ந்து வசித்துள்ளனர், அப்பொழுது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அந்த பெண்ணை அவரது மகன் கொலை செய்தது தெரியவந்தது. பின்னர், நீதிபதியின் உத்தரவை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நபரை போலீசார் காவலில் வைத்துள்ளனர்