கொலை செய்து சாப்பிட்டு விடுவார்கள் என்பதால் பெற்றோரை கொலை செய்த மகன்..!

United States of America
By Thahir May 29, 2023 07:43 AM GMT
Report

தனது பெற்றோரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த மகன் அளித்த வாக்குமூலம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோரை கொலை செய்த மகன் 

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் பகுதியில் இளைஞர் ஒருவர் தனது குடும்பத்தாரை கொடுமைப்படுத்தி தற்கொலைக்கு முயன்றதாக தகவல் ஒன்று போலீசாருக்கு கிடைத்ததன் பேரில் போலீசார் அங்கு விரைந்தனர்.

வீட்டில் தடுப்புகள் அமைக்கப்பட்டு மர்மமான முறையில் இருந்த நிலையில், அங்கு போலீசார் நுழைந்து பார்த்த போது துப்பாக்கியுடன் இளைஞர் ஒருவர் இருந்துள்ளார். அவர் அருகே 4 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு சடலமாக இருந்தனர்.

The son who brutally murdered his parents

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட இளைஞர் 18 வயதான சீசர் ஒலால்டே.இவரது தந்தை ரூபன் ஒலால்டே, தாய் ஐடா கார்சியா. இவர்களுக்கு லிஸ்பெட்,சீசர், ஆலிவர் என்ற 3 குழந்தைகள் உள்ளனர். இரண்டாவதாக பிறந்த சீசர் தான் இந்த கொடூர கொலை செய்துள்ளார்.

இளைஞர் அளித்த திடுக்கிடும் வாக்குமூலம் 

இளைஞரை பிடித்து விசாரித்ததில் தனது குடும்பத்தார் நர மாமிசம் உண்பார்கள் எனவும், தன்னை கொலை செய்து சாப்பிட திட்டம் போட்டனர்.

அதனால் அவர்களை கொலை செய்தேன் என்றார். இளைஞரின் வாக்குமூலத்தை கேட்டு போலீசார் குழுப்பமும் அதிர்ச்சியும் அடைந்தனர்.

பின்னர் இவர்களின் குடும்பத்தினர் பற்றி அருகில் வசித்தவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்ட இளைஞரின் குடும்பத்தினர் மிகவும் நல்லவர்கள், அவர்கள் கடுமையான உழைப்பாளிகள், ரூபனின் குடும்பம் அழகானது என்று தெரிவித்துள்ளனர்.

பெற்றோர், மூத்த சகோதரி, 5 வயது சகோதரர் ஆகிய நான்கு பேரை கொலை செய்த இளைஞர் சீசரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு குற்றச்சம்பவங்கள் சமீகாலமாக வெகுவாக அதிகரித்து வருகிறது. துப்பாக்கி உரிமம் வழங்குவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என பலத்தரப்பும் குரல் எழுப்பி வருகின்றனர்.