முதல்வரின் உணவில் எதோ கலக்கப்படுகிறது...!! முக்கிய தலைவரின் கருத்தால் பரபரப்பு..!!
பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் உணவில் விஷம் கலக்கப்படுவதாக ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியின் தலைவர் ஜிதன் ராம் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். நி
திஷ் குமார்
பீகார் மாநிலத்தில் முதல்வரான நிதிஷ்குமார் தேசிய அளவிலும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த நபராக இருந்துள்ளார். மேலும், தற்போது இந்திய அளவில் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ள இந்தியா கூட்டணியை உருவாக்கத்திலும் இவர் தான் முக்கிய பங்கினை ஆற்றினார்.
முதன் முதலில், இந்தியா கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை துவங்கியவரும் நிதிஷ் குமார் தான். இந்நிலையில், தான் நிதிஷ் குமார் மீது அம்மாநில அரசியல் தலைவர்கள் பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சாப்பாட்டுல என்னமோ கலக்குறாங்க
அதில் பீகார் முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சி கூறுகையில், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் உணவில் சில விஷம் பொருட்கள் கலக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். நிதிஷ்குமாரை முதல்வர் பதவியில் இருந்து நீக்கச் சதி நடப்பதாகவும், இதனால் அவரது உணவில் சிலர் விஷத்தைக் கலைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நிதிஷ்குமார் சமீபத்திய நடவடிக்கைகளும், அவரது உடல்நிலையும் பெரும் கவலையை ஏற்படுத்துகிறது என்றும் அதற்கு ஆதாரமாக அண்மையில் நிதிஷ் குமார் பங்கேற்ற வீடியோ ஒன்றையும் மேற்கோள் காட்டினார்.
இது தொடர்பான வீடியோவில், உயிரிழந்த தலைவர் ஒருவருக்கு அஞ்சலி செலுத்துவதற்கு பதிலாக அவரது மகன் அசோக் சவுத்ரிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி செலுத்துகிறார் நிதிஷ் குமார்.