ஆண் நண்பருடன் சென்ற பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி சம்பவம்

Sexual harassment Crime
By Sumathi Oct 23, 2022 04:28 AM GMT
Report

 ஆண் நண்பருடன் சென்ற பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டு பாலியல் வன்கொடுமை 

ஜார்கண்ட், சாய்பாசா பகுதியைச் சேர்ந்தவர் 26 வயது பெண். இவர் அங்குள்ள ஐடி நிறுவனத்தில் மென்பொருள் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண்ணான இவர், வீட்டில் இருந்து பணிபுரியும் முறையில் சொந்த ஊரில் தங்கியே வேலை பார்த்து வந்துள்ளார்.

ஆண் நண்பருடன் சென்ற பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி சம்பவம் | Software Engineer Gangraped In Jharkhand

இந்நிலையில், இந்த பெண் தெக்ரஹாத்து என்ற பகுதியில் தனது ஆண் நண்பருடன் பைக்கில் சென்றுள்ளார். அப்போது, 10 இளைஞர்கள் கொண்ட கும்பல் அவர்களை இடைமறித்துள்ளனர். உடன் வந்த ஆண் நண்பரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

நடந்தது என்ன?

பின்னர் இளம் பெண்ணை கடத்திச் சென்ற கும்பல் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.பாதிப்புக்கு ஆளான பெண்ணை சம்பவ இடத்திலேயே விட்டுவிட்டு அந்த கும்பல் தப்பி சென்றுள்ளது.

அந்த பெண் மீட்கப்பட்டு, தற்போது சதார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது உறவினர்கள் பெரும் ஆதங்கத்தில் உள்ளனர். இதனால் மருத்துவமனை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து வழக்குப்பதிவ்ய் செய்து விசாரித்ததில் குற்றத்தில் ஈடுபட்ட நபர்கள் பெரும்பாலானோர் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அதனையடுத்து போலீஸார் தேவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.