ரயிலின் ஏசி பெட்டிக்குள் புகுந்த பாம்பு; அலறிய பயணிகள் - வீடியோ வைரல்
ரயிலில் பாம்பு இருந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
ரயிலில் பாம்பு
ஜார்க்கண்டில் இருந்து கோவா நோக்கி வாஸ்கோடகாமா வாராந்திர விரைவு ரயில் சென்றுக் கொண்டிருந்தது. அதில் ஏசி பெட்டியில் பாம்பு ஒன்று இருந்துள்ளது.
இதனைப் பார்த்த பயணிகள் கூச்சலிட்டுள்ளனர். உடனே, தகவல் தெரிவிக்கப்பட்டு பாம்பு பத்திரமாக பிடிக்கப்பட்டு ரயிலில் இருந்து அகற்றப்பட்டது.
ஷாக் வீடியோ
இதனை வீடியோவாக எடுத்த நபர் ஒருவர் அதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து புகார் தெரிவித்துள்ளார். புகாரில் ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை டேக் செய்துள்ளார்.
Hi @IRCTCofficial @RailMinIndia Snake found in Train -17322 (Jasidih to Vasco De Gama) on berth on date of 21st Oct This complain is on behalf of my parents who are travelling in AC 2 Tier -(A2 31 , 33). Please take immediate action
— Ankit Kumar Sinha (@ankitkumar0168) October 21, 2024
I have attached Videos for reference. pic.twitter.com/h4Vbro8ZnN
அதற்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று ரயில்வே துறை பதிலளித்துள்ளது.
முன்னதாக, பல்பூரில் இருந்து மும்பை நோக்கிச் சென்ற கரீப் ரதம் எக்ஸ்பிரஸ் ரயில் பாம்பு கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.