திடீரென படமெடுத்த பாம்பு.. பயணிக்கு நேர்ந்த சோகம் - ஓடும் ரயிலில் பரபரப்பு!

Kerala India Railways
By Jiyath Apr 16, 2024 04:10 AM GMT
Report

ஓடும் ரயிலில் பயணியை பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடித்த பாம்பு 

கேரளா மாநிலம் குருவாயூரில் இருந்து நேற்று விரைவு ரயில் ஒன்று மதுரை நோக்கி புறப்பட்டது. இந்த ரயிலின் 6-வது பெட்டியில் மதுரை சின்ன கோவிலாங்குளம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (23) என்பவர் பயணம் செய்தார்.

திடீரென படமெடுத்த பாம்பு.. பயணிக்கு நேர்ந்த சோகம் - ஓடும் ரயிலில் பரபரப்பு! | Snake Bite Passenger On Guruvayur Madurai Train

ரயில் எர்ணாகுளம் ரயில் நிலையத்தை கடந்து சென்றபோது அவரை பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் வலி தாங்க முடியாமல் துடித்த கார்த்திக்கை ஏட்டுமானூர் ரயில் நிலையத்துக்கு ரயில் வந்ததும் ஆம்புலன்ஸ் மூலம் கோட்டயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ரயில் டிக்கெட் பரிசோதகருடன் தகராறு - ஆத்திரத்தில் பெண் பயணி செய்த காரியம்!

ரயில் டிக்கெட் பரிசோதகருடன் தகராறு - ஆத்திரத்தில் பெண் பயணி செய்த காரியம்!

போலீசார் சோதனை 

அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து அந்த ரயில் பெட்டியிலிருந்த பயணிகள் கீழே இறக்கப்பட்டு, ரயில்வே ஊழியர்கள் மற்றும் போலீசார் சோதனை செய்தனர்.

திடீரென படமெடுத்த பாம்பு.. பயணிக்கு நேர்ந்த சோகம் - ஓடும் ரயிலில் பரபரப்பு! | Snake Bite Passenger On Guruvayur Madurai Train

அப்போது அதில் பாம்பு இல்லை என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அந்த பெட்டியின் அனைத்து கதவுகளையும் மூடி, ரயிலில் இருந்து பிரிக்கப்பட்டது. பின்னர் மற்ற பெட்டிகள் அனைத்தும் இணைக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து ரயில் புறப்பட்டது.