முத்தங்களை ராகுல் காந்தி காற்றில் பறக்கவிட்டார் - ஓம் பிர்லாவுக்கு ஸ்மிருதி ராணி கடிதம்!
ராகுல் காந்தி மீது கடும் நடவடிக்கை எடுக்க ஸ்மிருதி இரானி வலியுறுத்தியுள்ளார்.
ராகுல் காந்தி
மத்திய பாஜக அரசுக்கு எதிராக நாடாளுமன்ற மக்களவையில் இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்கட்சிகளின் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்த தீர்மானம் மீது காரச்சார விவாதம் நடைபெற்றது.
அதில் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மணிப்பூர் விவகாரத்தில் பாஜக அரசை கடுமையாக விமர்சித்தார். பாரத மாதாவை கொன்றுவிட்டீர்கள். மணிப்பூர் மக்களை கொன்றுவிட்டீர்கள். இந்தியாவை கொன்றுவிட்டீர்கள்.
பறக்கும் முத்தம்
நீங்கள் துரோகிகள், நீங்கள் தேசபக்தர்கள் இல்லை என ஆவேசமாக பேசினார். இவரது பேச்சுக்கு பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பின் ராகுல் காந்தி அவையை விட்டு கிளம்பும்போது, அவை உறுப்பினர்களுக்கு 'பறக்கும் முத்தம்' கொடுத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு ஸ்மிருதி இரானி கடிதம் எழுதியுள்ளார். அதில், கேரள் மாநில வயநாடு எம்.பி ராகுல் காந்தி அவைநேரத்தில் போது செய்த செயல் குறித்து தங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்.
விவாதத்தை முடித்துக் கொண்டு அவர் ராஜஸ்தான் நிகழ்ச்சியில் பங்கேற்க புறப்பட்டபோது, பாஜக பெண் எம்.பிக்கள் அமர்ந்திருக்கும் பகுதியை நோக்கி ராகுல் காந்தி முத்தங்களை காற்றில் பறக்கவிட்டுச் சென்றதாக குற்றம்சாட்டியுள்ளார்.