இதனால் தான் சிங்கிள்; ஆனால் குழந்தைகள் வேண்டும் - மனம் திறந்த ராகுல் காந்தி

Rahul Gandhi Delhi Marriage
By Sumathi Feb 22, 2023 04:01 AM GMT
Report

தான் திருமணம் செய்யாமல் இருப்பது குறித்து ராகுல்காந்தி மனம் திறந்துள்ளார்.

 ராகுல்காந்தி 

காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினரான ராகுல்காந்தி, இத்தாலி நாட்டைச் சேர்ந்த நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். 52 வயதிலும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருக்கிறீர்களே என்ற கேள்விக்கு ராகுல் காந்தி, "விசித்திரமாகத்தான் இருக்கிறது. நான் திருமணம் செய்யாமல் இருப்பதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

இதனால் தான் சிங்கிள்; ஆனால் குழந்தைகள் வேண்டும் - மனம் திறந்த ராகுல் காந்தி | Rahul Gandhi Answers About His Marriage

செய்ய நிறைய வேலைகள் இருக்கின்றன. இருப்பினும் எனக்கு குழந்தைகள் வேண்டும் என்ற ஆசை உள்ளது. எங்கள் குடும்பத்தில் இந்திய பாட்டியான இந்திரா காந்திக்கு என் மீது பாசம் அதிகம். இத்தாலி பாட்டிக்கு பிரியங்கா மீது பாசம் அதிகம். இத்தாலி பாட்டி 98 வயது வரை வாழ்ந்து கடந்காண்டு தான் மறைந்தார்.

 திருமணம்? 

இத்தாலி பாட்டியுடன் மிகுந்த பாசத்துடன் இருந்தேன் என்றார். மேலும் தாடி குறித்த கேள்விக்கு இந்திய ஒற்றுமை யாத்திரை முடியும் வரை தாடியை எடுக்க கூடாது என்று முடிவு செய்தேன். அதனால் தான் தாடியுடன் உள்ளேன். இனி தாடியை வைத்திருக்கலாமா அல்லது எடுக்கலாமா என்று முடிவு செய்வேன் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, வரும் தேர்தலில் பிரதமர் மோடி நிச்சயம் தோற்று போவார் என்று சொல்லவில்லை. அதேவேளை, எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்தால் 100 சதவீதம் அவர்களை தோற்கடிக்கலாம் எனக் கூறியுள்ளார்.