இனி பொது இடங்களில் சிகரெட் பிடிக்க தடை - மீறினால் ரூ. 13 ஆயிரம் அபராதம்

France Smoking
By Sumathi May 31, 2025 05:01 AM GMT
Report

பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

புகைப்பிடிக்க தடை

பிரான்சில் பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்க வேண்டும் என மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இனி பொது இடங்களில் சிகரெட் பிடிக்க தடை - மீறினால் ரூ. 13 ஆயிரம் அபராதம் | Smoking Is Banned All Outdoor In France

இந்தச் சூழலில் சிகரெட் புகைப்பது தொடர்பாக ஃபிரான்ஸ் முக்கிய விதியை வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் கடுமையாக அமல்படுத்தவுள்ளது. அதன்படி, குழந்தைகள் அடிக்கடி செல்லும் இடங்களான கடற்கரைகள்,

பூங்காக்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்ட அனைத்து வெளிப்புற இடங்களிலும் புகைபிடிப்பதை ஃபிரான்ஸ் தடைசெய்யவுள்ளது.

மீண்டும் தலைதூக்கும் கொரோனா; மாஸ்க் கட்டாயம் - தமிழக சுகாதாரத்துறை

மீண்டும் தலைதூக்கும் கொரோனா; மாஸ்க் கட்டாயம் - தமிழக சுகாதாரத்துறை

 13 ஆயிரம் அபராதம்

ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 75,000 பேர் இறக்கின்றனர். இந்த தடை உத்தரவை மீறுபவர்களுக்கு 135 யூரோக்கள் (இந்திய மதிப்பில் 13 ஆயிரம் ரூபாய்) அபராதம் விதிக்கப்படும்.

இனி பொது இடங்களில் சிகரெட் பிடிக்க தடை - மீறினால் ரூ. 13 ஆயிரம் அபராதம் | Smoking Is Banned All Outdoor In France

அதேவேளை, இந்த தடை உத்தரவு இ-சிகிரெட்டுகளுக்கு பொருந்தாது. அதேபோல், டீக்கடைகளின் மாடிகளில் நின்று புகைப்பிடிப்பவர்களுக்கு இந்த தடை உத்தரவு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.