6 சிறுமிகளின் உயிரை பறித்த மோகம் - அதிர்ச்சி பின்னணி!
ரீல்ஸ் எடுக்க முயன்ற 6 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
ரீல்ஸ் மோகம்
உத்தரபிரதேசம், ஆக்ராவில் யமுனை நதிக்கரையோரம் பண்ணை ஒன்று அமைந்துள்ளது. இங்கு வேலை பார்த்து வந்த சுமார் 6 சிறுமிகள் யமுனை நதிக்கரைக்கு குளிக்க சென்றுள்ளனர்.
அப்போது சிறுமிகள் தண்ணீரில் விளையாடியபடி தங்களது செல்போனில் ரீல்ஸ் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். இதனையடுத்து நீரின் ஆழமான பகுதிக்கு சென்று ரீல்ஸ் எடுக்கலாம் என சிறுமிகள் முயன்றுள்ளனர்.
6 பேர் பலி
அவர்களில் ஒரு சிறுமி மட்டும் ஆபத்தை உணராமல் நதியின் ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். அங்கு பள்ளங்கள் இருப்பதால் அதில் தெரியாமல் விழுந்திருக்கிறார். அவரைக் காப்பாற்றுவதற்காக சென்று அவர்களும் நீருக்குள் இருந்த பள்ளங்களில் சிக்கிக் கொண்டனர்.
இதில் 6 சிறுமிகளும் ஆற்று நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் தீயணைப்புத்துறையினர் 6 சிறுமிகளின் உடல்களையும் மீட்டனர்.
தொடர்ந்து உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் உறுதியளித்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.