6 சிறுமிகளின் உயிரை பறித்த மோகம் - அதிர்ச்சி பின்னணி!

Uttar Pradesh Death
By Sumathi Jun 07, 2025 05:38 AM GMT
Report

  ரீல்ஸ் எடுக்க முயன்ற 6 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

ரீல்ஸ் மோகம்

உத்தரபிரதேசம், ஆக்ராவில் யமுனை நதிக்கரையோரம் பண்ணை ஒன்று அமைந்துள்ளது. இங்கு வேலை பார்த்து வந்த சுமார் 6 சிறுமிகள் யமுனை நதிக்கரைக்கு குளிக்க சென்றுள்ளனர்.

6 சிறுமிகளின் உயிரை பறித்த மோகம் - அதிர்ச்சி பின்னணி! | Six Girls Drown In Yamuna River Agra

அப்போது சிறுமிகள் தண்ணீரில் விளையாடியபடி தங்களது செல்போனில் ரீல்ஸ் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். இதனையடுத்து நீரின் ஆழமான பகுதிக்கு சென்று ரீல்ஸ் எடுக்கலாம் என சிறுமிகள் முயன்றுள்ளனர்.

ஆட்டோ ஓட்டுநரை செருப்பால் தாக்கிய பெண் - காலில் விழுந்து மன்னிப்பு கோரிய வீடியோ!

ஆட்டோ ஓட்டுநரை செருப்பால் தாக்கிய பெண் - காலில் விழுந்து மன்னிப்பு கோரிய வீடியோ!

6 பேர் பலி

அவர்களில் ஒரு சிறுமி மட்டும் ஆபத்தை உணராமல் நதியின் ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். அங்கு பள்ளங்கள் இருப்பதால் அதில் தெரியாமல் விழுந்திருக்கிறார். அவரைக் காப்பாற்றுவதற்காக சென்று அவர்களும் நீருக்குள் இருந்த பள்ளங்களில் சிக்கிக் கொண்டனர்.

uttar pradesh

இதில் 6 சிறுமிகளும் ஆற்று நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் தீயணைப்புத்துறையினர் 6 சிறுமிகளின் உடல்களையும் மீட்டனர்.

தொடர்ந்து உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் உறுதியளித்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.