அந்த ஒரு சம்பவம்தான்; செருப்பால் அடித்துக்கொண்டு நடிப்பதில்லை - சிவகுமார் ஓபன்டாக்!

Sivakumar Tamil Cinema
By Sumathi Aug 28, 2024 07:30 PM GMT
Report

நடிப்பதை நிறுத்தியது குறித்து சிவகுமார் மனம் திறந்துள்ளார்.

சிவகுமார்

கதாநாயகனாகவும், துணை கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தவர் சிவகுமார். சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி சீரியல் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானார். ஆனால், திடீரென்று சீரியல் மற்றும் சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார்.

அந்த ஒரு சம்பவம்தான்; செருப்பால் அடித்துக்கொண்டு நடிப்பதில்லை - சிவகுமார் ஓபன்டாக்! | Sivakumar About Decided To Quit Cinema

இந்நிலையில், இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள அவர், ஆரம்பத்தில் நான் கதாநாயகனாக சினிமாக்களில் நடித்துக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் நான் நடித்த படங்கள் எல்லாம் பிளாப் ஆக தொடங்கிவிட்டது. எனக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கிவிட்டது.

அந்த நேரத்தில் நமக்கு ஒரு வருமானம் வேண்டும் என்பதற்காக நான் அப்பா கேரக்டரிலும் நடிக்க தொடங்கிவிட்டேன். கதாநாயகனாக நடிக்கும் போது ஒரு படத்திற்கு ரூ. 5 லட்சம் வரை சம்பளம் வாங்கினேன், அப்பாவாக நடிக்கும் போது ரூ. 2 லட்சம்.

கண்டிஷன் போட்ட சிவகுமார்? குடும்பம், குழந்தையை மறந்துட்டு போ.. போட்டுடைத்த ஜோதிகா!

கண்டிஷன் போட்ட சிவகுமார்? குடும்பம், குழந்தையை மறந்துட்டு போ.. போட்டுடைத்த ஜோதிகா!

 சினிமாவில் விலகல்

ஆனால் சீரியலில் எனக்கு பேட்டா, சம்பளம் எல்லாவற்றையும் கணக்கு பார்க்கும் போது மாதத்திற்கு ரூ. 1 லட்சத்திற்கும் மேலே வந்தது. சித்தி சீரியலில் நடித்துக் கொண்டிருந்த போது பாசமலர் காட்சி வந்தது. பாசமலர் படத்தில் கிளைமேக்ஸ் நடிக்க சிவாஜி கணேசன் தத்ரூபமாக வர வேண்டும் என்று 2 நாட்கள் இரவு தூங்காமல் சாப்பிடாமல் இருந்து நடித்தார்.

sivakumar

நானும் சீரியலுக்காக சாப்பிடாமல் தூங்காமல் அந்த காட்சியை நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது பக்கத்தில் இருந்த ஒரு பெண் அவரது காதலருடன் போனில் பேசிக்கொண்டு சிரித்துக்கொண்டு இருந்தது. கோபத்துடன் உயிர் கொடுத்து நடித்துக் கொண்டிருக்கிறேன் இப்படி மதிக்காமல் பேசிக்கொண்டிருக்கிறாய் என கேட்டதற்கு,

இப்ப எதற்று சார் கத்துறீங்க, எப்படியும் இதை நீங்க டப்பிங் தான பேச போறீங்க என்று அலட்சியமாக பேசுனாங்க. இதனால் நடிப்புக்கு மரியாதை இல்லை அதனால் எனக்கு இந்த நடிப்பு வேண்டாம் என்று நான் அன்னைக்கு செருப்பால என்ன அடிச்சுகிட்டு இனி நான் மேக்கப் போட மாட்டேன்னு முடிவு எடுத்தேன். அதனால் தான் இப்ப வரைக்கும் நான் நடிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.