சிவகாசி பட்டாசு ஆலையில் திடீர் விபத்து- 4 பேர் படுகாயம்

accident firecracker sivakasi
By Jon Mar 13, 2021 01:09 PM GMT
Report

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த திடீர் வெடி விபத்தில் படுகாயம் அடைந்த 4 தொழிலாளர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அவசர சிகிக்சை பிரிவில் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து தீ எரிந்து வருவதால் தீ அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். 4 தொழிலாளர்களுக்கும் தீ காயம் அதிகமாக உள்ளதால் மேல்சிகிச்சைக்காக அவர்கள் மதுரைக்கு அழைத்து செல்ல வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் நடைபெறும் 5-வது வெடிவிபத்து இதுவாகும். அதுமட்டுமல்லாமல் கடந்த ஒரு மாதத்தில் நடைபெற்ற விபத்தில் இதுவரை 31 பேர் உயிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.